வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் கட்டாயம்! மத்திய அரசு!

face mask 1 - 2026

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கும் வகையில் மக்கள் வீட்டில் தயாாரிக்கப்பட்ட முகக் கவசத்தை அணியலாம். அதிலும் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் 68 உயிர்கள் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் முகக் கவசத்தின் விலையும் திடீரென உயர்ந்து வருகிறது.

face mask 1 1 - 2026

இதனிடையே சமீபத்தில் மத்திய அரசு , வீட்டிலேயே மக்கள் முகக் கவசத்தை எளிய முறையில் தயாரிப்பது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்து.

தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. அறிகுறிகள் இருப்போர், தும்மல், ஜலதோஷம் இருந்தால் அவர்கள் அணியலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், தற்போது கொரோனா பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் மக்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இதன்படி, ‘சுவாசக் கோளாறு இல்லாதவர்கள், உடல்நலப் பிரச்சினை இல்லாதவர்கள் கூட வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். முகக்கவசம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டிருந்தாலும், துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அந்த முகக் கவசத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகும்போது முகக்கவசம் அணியாமல் மக்கள் செல்லக்கூடாது. முகக்கவசம் அணிந்து செல்வது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்கத் துணைபுரியும்.

அதேநேரம் நேரடியாக கரோனா நோயாளிகளைக் கையாளும் சூழலில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் முக்கவசம் தயாரித்தால், குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பயன்படுத்த வேண்டும், ஒருவர் பயன்படுத்திய முகக் கவசத்தைத் துவைத்து மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. முகக்கவசம் நன்றாக மூக்கு, வாய்ப் பகுதியை மூடும் வகையில் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில் அனைவரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், கரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடும், பாதிக்கப்பட்டவர் பேசும்போதும், மூச்சுவிடும் போதும் பரவக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தார்கள்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இதையடுத்து அமெரிக்க அரசும் தங்கள் நாட்டு மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்த சூழலில் மத்திய அரசும் தான் முன்பு தெரிவித்திருந்த அறிவுரைகளை மாற்றி, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories