வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் கட்டாயம்! மத்திய அரசு!

face mask 1 - 2026

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கும் வகையில் மக்கள் வீட்டில் தயாாரிக்கப்பட்ட முகக் கவசத்தை அணியலாம். அதிலும் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் 68 உயிர்கள் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் முகக் கவசத்தின் விலையும் திடீரென உயர்ந்து வருகிறது.

face mask 1 1 - 2026

இதனிடையே சமீபத்தில் மத்திய அரசு , வீட்டிலேயே மக்கள் முகக் கவசத்தை எளிய முறையில் தயாரிப்பது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்து.

தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. அறிகுறிகள் இருப்போர், தும்மல், ஜலதோஷம் இருந்தால் அவர்கள் அணியலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், தற்போது கொரோனா பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் மக்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதன்படி, ‘சுவாசக் கோளாறு இல்லாதவர்கள், உடல்நலப் பிரச்சினை இல்லாதவர்கள் கூட வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். முகக்கவசம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டிருந்தாலும், துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அந்த முகக் கவசத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகும்போது முகக்கவசம் அணியாமல் மக்கள் செல்லக்கூடாது. முகக்கவசம் அணிந்து செல்வது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்கத் துணைபுரியும்.

அதேநேரம் நேரடியாக கரோனா நோயாளிகளைக் கையாளும் சூழலில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் முக்கவசம் தயாரித்தால், குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பயன்படுத்த வேண்டும், ஒருவர் பயன்படுத்திய முகக் கவசத்தைத் துவைத்து மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. முகக்கவசம் நன்றாக மூக்கு, வாய்ப் பகுதியை மூடும் வகையில் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில் அனைவரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், கரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடும், பாதிக்கப்பட்டவர் பேசும்போதும், மூச்சுவிடும் போதும் பரவக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தார்கள்.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

இதையடுத்து அமெரிக்க அரசும் தங்கள் நாட்டு மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்த சூழலில் மத்திய அரசும் தான் முன்பு தெரிவித்திருந்த அறிவுரைகளை மாற்றி, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories