ஐயோ பாவம்… மகளின் இறுதிச் சடங்கை வீடியோ அழைப்பில் பார்த்து கதறிய தந்தை!

Published:

last rites of daughter - 2026

தினமும் வீடியோகால் மூலம் தன் மகளுடன் பேசிவரும் அந்த தந்தை அதே வீடியோ கால் மூலம் அவளுடைய இறுதிச் சடங்கையும் பார்த்து அழுது கதறினார்.

இந்த சோக சம்பவம் தெலங்காணா, ஜகித்யால மாவட்டத்தில் நடந்தது. எந்த ஒரு தந்தைக்கும் மகள் என்றால் உயிர்தான். அவளுக்கு சிறு காயம் ஏற்பட்டாலும் பொறுக்கமாட்டார். அப்படிப்பட்டது தன் அன்புப் பெண் இறந்து போனால்… அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு மகளை கடைசியாக பார்க்கக் கூட இயலாவிட்டால்… அந்த தந்தையின் இதயம் எத்தனை பாடுபடும்?

வீடியோகால் மூலம் தினமும் பேசிவரும் தன் மகளை அதே வீடியோகால் மூலம் மயானத்திற்கு அனுப்பி வைக்க வேண்டி வந்தால் அந்த தந்தை படும் வேதனையை என்னவென்று சொல்வது?

ஜெகித்யால மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அனுபவித்த நரகவேதனை இது. ஜகித்தியால மாவட்டம் பீர்பூர் மண்டலம் தூங்கூரு கிராமத்தை சேர்ந்த பாலாஜி பாஸ்கர், தன் மனைவி சுனிதாவையும் மகள் சாகித்யா (12) வையும் சொந்த ஊரிலேயே இருத்தி, வேலைவாய்ப்பு தேடி ஐந்து மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றார்.

சாகித்யா கடந்த சில நாட்களாக டயாபடீஸ் நோயால் துன்பப்பட்டு வந்தாள். அவளுக்கு டிரீட்மெண்ட் செய்து வருகையில் பொருளாதார ரீதியாக மிகவும் குமைந்து போனார்கள். மகளைக் காப்பாற்றுவதற்காக கடன் வாங்கினார்கள். ஆனால் நிலைமை மோசமானதால் சாகித்யா வெள்ளிக்கிழமையன்று இறந்துபோனாள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

தன் அன்பு மகள் இறந்து போனது தெரிந்த போதும் லாக்டவுன் காரணமாக பாஸ்கர் துபாயிலிருந்து வர இயலாத நிலைமை ஏற்பட்டது. அதனால் செய்வதறியாமல் வீடியோகால் மூலம் தந்தைக்கு காண்பித்தார்கள்.

எதுவும் செய்ய இயலாமல் வீடியோகால் மூலம் சாகித்யாவின் இறுதிச்சடங்கை காட்டினார்கள். இந்த விஷயம் அறிந்த உள்ளூர்வாசிகள் கண்ணீர் விட்டார்கள். எந்த தந்தைக்கும் இதுபோன்ற கஷ்டம் வரக்கூடாது என்று வருந்தினார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img