கொரோனா… என்ன செய்யணும்; என்ன செய்யக்கூடாது?: சுகாதார அமைச்சகம் விளக்கம்!

coronao kavasam - 2026

நாடு முழுதும் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால், இங்கு, 5,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 160ஐ தாண்டி சென்றுகொண்டிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். எனினும், வைரஸ் மீதான அச்சத்தின் காரணமாக, இவர்களை மக்கள் புறக்கணிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. இத்தகைய நடத்தைகள், சமூகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும்.

corona test - 2026

இந்த இக்கட்டான சூழலில், மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

பொது சேவைகளில் ஈடுபடுவோரை பாராட்டி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருக்கவேண்டும்.

உலக சுகாதார அமைப்பு அல்லது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே பிறருக்கு பகிரவேண்டும்

சமூக ஊடகங்களில், ஒரு செய்தியை பகிர்வதற்கு முன், அந்த தகவல் உண்மையானதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்

கொரோனா வைரசில் இருந்து மீண்டு வந்தவர்களின் கதைகள் போன்ற நேர்மறையான செய்திகளை பகிரவேண்டும்

அதே நேரத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடக்கூடாது

மருத்துவ, சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து எந்த விமர்சன பதிவுகளையும் பகிரக்கூடாது

இந்த வைரஸ் பரவலுக்கு, குறிப்பிட்ட சமூகத்தினர்தான் காரணம் என முத்திரை குத்தக் கூடாது

சிகிச்சை பெற்று வருவோரை, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்’ என அழைக்கக் கூடாது; ‘கொரோனாவில் இருந்து மீண்டு வருவோர்’ என அழைக்க வேண்டும்… – என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories