கொரோனா: கை விரித்த மருத்துவமனைகள்.. நிறைமாத கர்ப்பிணி மூச்சு திணறலுடன் உயிரிழப்பு!

pregnant women - 2026

மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 3 மருத்துவமனைகளை நாடிய நிறைமாத கர்ப்பிணி பெண், சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில், கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

மும்பை புறநகர் பகுதியான நாலா சோபாராவைச் சேர்ந்தவர் 27 வயது நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு ஏப்ரல் 8 பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி இரவு மூச்சு விட சிரமப்பட்டுள்ளார். அடுத்த 12 மணி நேரம் அவர் கணவர், கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு, ஆட்டோவில் 70 கி.மீ பயணம் செய்து, மூன்று மருத்துவமனைகளில் ஏறி இறங்கியும், சிகிச்சை கிடைக்காததால், அடுத்த நாள் மதியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முதலில் அருகிலுள்ள நர்ஸிங் ஹோமை நாடியுள்ளனர். கொரோனா இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அங்கிருந்த மருத்துவர் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து, அரசு நடத்தும் சர்வோதயா மகப்பேறு இல்லத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தங்களிடம் சிகிச்சை அளிக்க போதுமான வசதியில்லை என அவர்களும் அனுப்பிவிட்டதாகவும், ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்யவில்லை என்கிறார். அதிகாலை 2.30 மணிக்கு 40 கி.மீ பயணித்து, மும்பையிலுள்ள சதாப்தி மருத்துவமனையை அணுகியுள்ளனர்.

அங்கு கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள், நூரையீரலில் நீர் இருப்பதை கண்டறிந்து, 30 கி.மீ தொலைவில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில், கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக அவர் இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த குடிசைப்பகுதியை நகராட்சி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

யார் யாருடன் கர்ப்பிணி பெண் தொடர்பில் இருந்தார் என்ற தகவல்களை சேகரிக்க, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக வந்துள்ளதாக நினைத்துக் கொண்டு, அப்பகுதியினர் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து, கர்ப்பிணி பெண் வீட்டிற்கு அருகில் இருந்த 32 வீட்டினரை தனிமை முகாமிற்கு மாற்றுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். எவ்வாறு கர்ப்பிணிக்கு தொற்று ஏற்ப்பட்டிருக்கும் என்பதை விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories