கொரோனா: தில்லியில் 2 வயது குழந்தைக்கு தொற்று!

தில்லியில் 2 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த புற்றுநோய் மருத்துவமனை ஏப்.,29 வரை மூடப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தில்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 1,561 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 51 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. தில்லியில் தற்போது 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மாநிலத்தில் உறுதி செய்யப்பட்ட மிகக்குறைந்த வயதுடைய நோயாளியாக பதிவானது. இதனால் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த புற்றுநோய் மருத்துவமனை வரும் 29ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நர்ஸாக உள்ள குழந்தையின் தாயார், தற்போது 8 மாத கர்ப்பமாகவும் உள்ளார். ஏற்கனவே கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள இவர் மூலமாக தான் சிறுவனுக்கும் வந்திருக்கும் என நம்பப்படுகிறது.

இதனால் இவரின் கணவருக்கும் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறார். தாயார் பணிபுரியும் மருத்துவமனையில் 3 டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‘அந்த மருத்துவனையின் டாக்டர் ஒருவர், இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பி வந்த தனது சகோதரனின் குடும்பத்தை பார்க்க சமீபத்தில் சென்றிருந்ததாகவும், அவர்கள் மூலமாக டாக்டருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பரவியிருக்கலாம்,’ என்றார். இதனையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையின் ஆய்வகங்கள், வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, சுமார் 45 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories