spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஸ்மிருதி இராணி புகாரால் விடிவு: கோவாவில் அனைத்து கடைகளிலும் ’ரகசிய கேமரா’ சோதனை!

ஸ்மிருதி இராணி புகாரால் விடிவு: கோவாவில் அனைத்து கடைகளிலும் ’ரகசிய கேமரா’ சோதனை!

- Advertisement -

smrithi-irani பனாஜி: கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா ரெடிமேட் துணைக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்தார். இதை அடுத்து அவர் புகார் தெரிவித்ததில், போலீசார் கடை மேலாளர் உள்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது புகாரால், ஏற்கெனவே புகாருக்கு உள்ளான அந்தக் கடையின் மீது மேலும் அழுத்தம் ஏற்பட்டதுடன், கோவாவில் அனைத்து ரெடிமேட் கடைகளிலும் ரகசிய கேமரா குறித்த ஆய்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விடுமுறையில் தனது கணவர் சுபினுடன் கோவா வந்தார். நேற்று காலை அவர் கண்டோலிம் என்ற இடத்தில் உள்ள ‘பேப் இந்தியா’ ரெடிமேட் துணிக்கடைக்கு உடைகள் வாங்கச் சென்றார். உடைகள் வாங்கிய பின்னர் அங்குள்ள உடை மாற்றும் அறைக்குச் சென்றார். அப்போது அவர் அந்த அறையில் ஒரு சிறிய ஓட்டையும், அதற்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் கோவா எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தொடர்பு கொண்டு கூற, லோபோ சிறிது நேரத்தில் போலீசாருடன் அந்தக் கடைக்கு வந்தார். இது தொடர்பாக போலீசில் லோபோ புகார் அளித்ததால், போலீசார் அந்த அறையை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த ரகசிய கேமராவையும், அந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்துள்ள ஒரு ‘ஹார்டு டிஸ்க்’கையும் கைப்பற்றினர். அந்தக் கடையின் ஊழியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கேமரா 4 மாதங்களுக்கு முன் பொருத்தப் பட்டது தெரியவந்தது. அங்குப் பதிவாகும் காட்சிகள் மேலாளர் அறையில் உள்ள கணினித் திரையில் தெரிந்தது. கடையில் திருட்டைத் தடுக்கவே இந்த சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டுள்ளது என்று கடை மேலாளரும் ஊழியர்களும் கூறினாலும், அந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகள் வீடியோ பதிவுகளாக கணினியில் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் உடைமாற்றும் காட்சிகள் அந்தக் கணினியில் பதிவாகியுள்ளன. இந்தத் தகவல் கிடைத்து பத்திரிகை, காட்சி ஊடக செய்தியாளர்களும் அங்கு வந்தனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லோபோ, இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன். அந்தக் கேமராவில் பதிவான காட்சிகள் சோதித்துப் பார்க்கப் பட்டதில், ஏற்கெனவே அங்கே உடை மாற்றிய பலரது வயிற்றுக்கு மேலே உள்ள பகுதிகள் அந்தக் கணினியில் பதிவாகி இருக்கிறது என்று கூறினார். இதனால் இந்தப் பிரச்னை மேலும் பெரிதானது. இதனிடையே இந்த ஷோரூமில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது இது முதல்முறை அல்ல என்று பலரும் கூறியுள்ளனர். இதுவரை பெரிய அளவில் புகார் வந்து, நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய அமைச்சரே நேரடியாகக் கண்டறிந்து புகார் அளித்ததின் பேரில் கோவா நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்ப, கோவா முழுவதும் உள்ள ரெடிமேட் ஷோரூம், துணிக் கடைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe