ஸ்மிருதி இராணி புகாரால் விடிவு: கோவாவில் அனைத்து கடைகளிலும் ’ரகசிய கேமரா’ சோதனை!

smrithi-irani பனாஜி: கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா ரெடிமேட் துணைக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்தார். இதை அடுத்து அவர் புகார் தெரிவித்ததில், போலீசார் கடை மேலாளர் உள்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது புகாரால், ஏற்கெனவே புகாருக்கு உள்ளான அந்தக் கடையின் மீது மேலும் அழுத்தம் ஏற்பட்டதுடன், கோவாவில் அனைத்து ரெடிமேட் கடைகளிலும் ரகசிய கேமரா குறித்த ஆய்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விடுமுறையில் தனது கணவர் சுபினுடன் கோவா வந்தார். நேற்று காலை அவர் கண்டோலிம் என்ற இடத்தில் உள்ள ‘பேப் இந்தியா’ ரெடிமேட் துணிக்கடைக்கு உடைகள் வாங்கச் சென்றார். உடைகள் வாங்கிய பின்னர் அங்குள்ள உடை மாற்றும் அறைக்குச் சென்றார். அப்போது அவர் அந்த அறையில் ஒரு சிறிய ஓட்டையும், அதற்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் கோவா எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தொடர்பு கொண்டு கூற, லோபோ சிறிது நேரத்தில் போலீசாருடன் அந்தக் கடைக்கு வந்தார். இது தொடர்பாக போலீசில் லோபோ புகார் அளித்ததால், போலீசார் அந்த அறையை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த ரகசிய கேமராவையும், அந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்துள்ள ஒரு ‘ஹார்டு டிஸ்க்’கையும் கைப்பற்றினர். அந்தக் கடையின் ஊழியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கேமரா 4 மாதங்களுக்கு முன் பொருத்தப் பட்டது தெரியவந்தது. அங்குப் பதிவாகும் காட்சிகள் மேலாளர் அறையில் உள்ள கணினித் திரையில் தெரிந்தது. கடையில் திருட்டைத் தடுக்கவே இந்த சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டுள்ளது என்று கடை மேலாளரும் ஊழியர்களும் கூறினாலும், அந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகள் வீடியோ பதிவுகளாக கணினியில் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் உடைமாற்றும் காட்சிகள் அந்தக் கணினியில் பதிவாகியுள்ளன. இந்தத் தகவல் கிடைத்து பத்திரிகை, காட்சி ஊடக செய்தியாளர்களும் அங்கு வந்தனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லோபோ, இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன். அந்தக் கேமராவில் பதிவான காட்சிகள் சோதித்துப் பார்க்கப் பட்டதில், ஏற்கெனவே அங்கே உடை மாற்றிய பலரது வயிற்றுக்கு மேலே உள்ள பகுதிகள் அந்தக் கணினியில் பதிவாகி இருக்கிறது என்று கூறினார். இதனால் இந்தப் பிரச்னை மேலும் பெரிதானது. இதனிடையே இந்த ஷோரூமில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது இது முதல்முறை அல்ல என்று பலரும் கூறியுள்ளனர். இதுவரை பெரிய அளவில் புகார் வந்து, நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய அமைச்சரே நேரடியாகக் கண்டறிந்து புகார் அளித்ததின் பேரில் கோவா நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்ப, கோவா முழுவதும் உள்ள ரெடிமேட் ஷோரூம், துணிக் கடைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் கூறினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories