February 22, 2026, 7:37 PM
29 C
Chennai

சாப்பாட்டுக்கே வழியில்லை சவுரனுக்கு எங்க போக? தங்கம் வாங்க ஆன்லைன் வாங்க.. அட்சய திருதியைக்கு.. அடி போடும் நகைக்கடைகள்!

gold
gold

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியமால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்த படியே வேலை செய்ய வைத்து வருகின்றன. ஆனால் இந்த ஊரடங்கினால் ஆதரவற்றோர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அனைத்து வணிகமும் முடங்கியுள்ளதை போல, நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை அட்சய திருதியையை முன்னிட்டு ஆன்லைனில் தங்கம் வாங்கலாம் என்று முன்னணி நகைக்கடைகள் அறிவித்துள்ளன. வழக்கமாக சித்திரை அமாவாசை முடிந்த 3 ஆவது திதியை ஆட்சியை திருதியை ஆக கருதப்படும். அதன் படி, இந்த ஆண்டு வரும் 26 ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது.

அந்த நன்னாளில் ஒரு சிறிய தங்கம் வாங்கினால் நல்லது என்று ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு அட்சய திருதியை ஊரடங்கில் வருவதால் மக்கள் யாராலும் நகைக்கடைகளுக்கு செல்ல இயலாது. அதனால் மக்கள் ஆன்லைன் மூலம் நகை வாங்கலாம் என்று முன்னணி நகைக்கடைகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன.

அதாவது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய பிறகு கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் ஊரடங்கு முடிந்த பின்னர், வாடிக்கையாளர்கள் நகைக்கடைகளுக்கு சென்று நகையை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பரவிய நிலையில் நெட்டிசன்கள், “எதை கொண்டு அடிச்சாலும் இவங்க திருந்த மாட்டாங்க” என்று விமர்சித்து வருகின்றனர். ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது நெட்டிசன்களிடையே பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories