December 6, 2025, 5:38 AM
24.9 C
Chennai

சாப்பாட்டுக்கே வழியில்லை சவுரனுக்கு எங்க போக? தங்கம் வாங்க ஆன்லைன் வாங்க.. அட்சய திருதியைக்கு.. அடி போடும் நகைக்கடைகள்!

gold
gold

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியமால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்த படியே வேலை செய்ய வைத்து வருகின்றன. ஆனால் இந்த ஊரடங்கினால் ஆதரவற்றோர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அனைத்து வணிகமும் முடங்கியுள்ளதை போல, நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை அட்சய திருதியையை முன்னிட்டு ஆன்லைனில் தங்கம் வாங்கலாம் என்று முன்னணி நகைக்கடைகள் அறிவித்துள்ளன. வழக்கமாக சித்திரை அமாவாசை முடிந்த 3 ஆவது திதியை ஆட்சியை திருதியை ஆக கருதப்படும். அதன் படி, இந்த ஆண்டு வரும் 26 ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது.

அந்த நன்னாளில் ஒரு சிறிய தங்கம் வாங்கினால் நல்லது என்று ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு அட்சய திருதியை ஊரடங்கில் வருவதால் மக்கள் யாராலும் நகைக்கடைகளுக்கு செல்ல இயலாது. அதனால் மக்கள் ஆன்லைன் மூலம் நகை வாங்கலாம் என்று முன்னணி நகைக்கடைகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன.

அதாவது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய பிறகு கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் ஊரடங்கு முடிந்த பின்னர், வாடிக்கையாளர்கள் நகைக்கடைகளுக்கு சென்று நகையை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பரவிய நிலையில் நெட்டிசன்கள், “எதை கொண்டு அடிச்சாலும் இவங்க திருந்த மாட்டாங்க” என்று விமர்சித்து வருகின்றனர். ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது நெட்டிசன்களிடையே பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories