2 கோடி தந்தால் புதையல்! புளுகிய போலிச் சாமியார்! அரசு அலுவலர் உட்பட 5 பேர் கைது!

muthukulathur

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். 38 வயதான இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் செய்வதில் வல்லவர் என அப்பகுதி வாசிகள் நம்பியுள்ளனர். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில் குறி சொல்லும் செல்வராஜிடம் ஏராளமானோர் குறிகேட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில் சாமியார் செல்வராஜ் குறி கேட்க வந்த தோப்படைபட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களிடம் , ஆனையூரில் தங்க கட்டிகள், தங்க சிலைகள், வைரகற்கள் என புதையல் இருப்பதாகவும் அதை எடுத்து தர தலா 50 லட்சம் என காணிக்கையாக 2 கோடி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர்கள் கணிக்கையை கொஞ்சம் குறைக்கும் படி சாமியாரிடம் கேட்க அவர் அதற்கு உடன்படவில்லை என தெரிகிறது. இதனால் கடுப்பான நால்வரும், சாமியாடி புதையலை மறைத்து வைத்துள்ளார் என்று மாவட்ட எஸ்.பிக்கு போன் செய்து கூறிவிட்டு கையுடன், அந்த செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர்

இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் சாமியார் செல்வராஜை கண்காணித்துடன் மாறுவேடத்தில் அங்கு குறி கேட்க சென்றுள்ளனர். அப்போது வந்தவர்கள் போலீஸ் என்பது தெரியாமல் புதையல் விஷயத்தை அவர்களிடமும் சொல்ல சாமியார் செல்வராஜை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் புதையல் இருப்பதாக கூறியது ஏமாற்றுவேலை என்பது தெரியவந்தது.

சாமியாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், புதையல் எடுக்க திட்டம் போட்ட தோப்படைபட்டி கிராமநிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி, மற்றும் முத்து, மகாதேவன், அருள் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய மண்டை ஒடுகள், சிலைகள் மற்றும் போலி வைர கற்களை கைப்பற்றிய போலீசார் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories