பாஜக அலுவலகம் சூறை: காங்கிரஸார் கைது; பாஜக-காங். போட்டி மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய விவகாரத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட 8 பேரை புதுவை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காங்கிரஸாருக்கு போட்டியாக எதிர்ப்பு மறியலை பாஜகவினரும் அதற்கு எதிர்ப்பாக காங்கிரஸாரும் மறியல் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்தார். அதனைக் கண்டித்து நாடு முழுவதும் சில இடங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். புதுவையில் இளைஞர் காங்கிரசார் இந்திரா காந்தி சிலையிலிருந்து நேற்று மதியம் ஊர்வலமாக ரெட்டியார்பாளையம் ஜான்சி நகருக்குச் சென்று அங்குள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அழுகிய முட்டை, தக்காளியை வீசியும், கற்களை எடுத்து வீசியும் வன்முறையில் இறங்கினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பாஜக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி போர்க் களமானது. இதனிடையே பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் எஸ்பி அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வடக்கு எஸ்பி ரவிக்குமார் சமாதானப்படுத்தினார். பின்னர், பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், பொருட்களை சேதப்படுத்துதல், கல் வீசித் தாக்குதல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 7 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, நிர்வாகிகள் அசோக் ராஜா, பிரபு, கணேஷ், பரூக், சிவாஜி, வரதராஜ், சத்யா உள்பட 8 பேரை ஆட்டுப்பட்டி அருகே நேற்று நள்ளிரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் லாஸ்பேட்டை நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து செல்லப்பட்டு மாஜிஸ்திரேட் விஜயகுமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, அவரது உத்தரவின் பேரில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இளைஞர் காங்கிரஸார் பேரைக் கைது செய்ததைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலை அருகே நடந்த மறியலில் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியலிங்கம், நாராயணசாமி உள்பட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் பங்கேற்றனர். முன்னதாக கிரிராஜ் சிங் உருவப் படத்தை அவர்கள் திடீரென எரித்தனர். இவ்வாறு பாஜகவும், காங்கிரஸும் போட்டியாக மேற்கொண்ட மறியல் போராட்டங்களால் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Topics

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories