உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

panneerselvam-delhi
தில்லி விஞ்ஞான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டபோது…
  புதுதில்லி: உயர் நீதிமன்றம் உள்ளிட்ட தமிழக நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப் படவேண்டும் என்று தில்லியில் நடைபெறும் முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். மேலும், எந்தத் தலையீடும் இன்றி நீதித்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சார்பில் தில்லி விஞ்ஞான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த இந்த மாநாட்டில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொதுமக்களுக்கு விரைவானதும் சரியானதுமான நீதியை வழங்குவதையே நீதித்துறை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நீதித்துறைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தினால் மட்டுமே அதன் சுதந்திரத்தை உறுதி செய்ய முடியும். ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறபடி, தமிழக நீதிமன்றங்களில் தமிழை அங்கீகரித்து வழக்காடு மொழியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில அலுவல் மொழியை உயர் நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் விசாரணைகளின்போது பயன்படுத்த அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது. எனவே, தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்ற முந்தைய நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்ய முக்கியத்துவம் அளித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் நீதித்துறைக்கென ரூ.809.7 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் கட்டடப் பணிகள், பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.375 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012-2013 ஆம் ஆண்டில் 178 நீதிபதிகளை தமிழக அரசு தேர்வு செய்து சிவில் நீதிமன்றங்களில் பணி அமர்த்தியுள்ளது. மேலும், 162 சிவில் நீதிபதிகளை நியமிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. துணை நீதிமன்றங்களுக்காக 35 நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு தேசிய நீதிமன்ற நிர்வாக அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதோடு, தேவையான உதவியாளர்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை உள்கட்டமைப்புக்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து வழங்கினால், 2017-ம் ஆண்டுக்குள் அனைத்து நீதிமன்றங்களும் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் நிலை ஏற்படும்… என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories