புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நீதிபதிகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் குரியன் புறக்கணித்தார். கிறிஸ்துவர்கள் புனித நாட்களாகக் கருதும், புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரை இந்த நீதிபதிகள் மாநாடு நடத்தப் பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே நீதிபதி குரியன் விருந்தில் பங்கேற்க மறுத்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குரியன் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி, தான் விருந்தில் பங்கேற்க இயலாமல் போவதற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். அதே போல், தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அந்த விருந்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்திருந்தார். அந்தக் கடிதத்தில், கிறிஸ்துவ மக்களின் விரத நாட்களான புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரையில் மாநாடு நடத்துவது வேதனை அளிக்கிறது. மற்ற மதத்தினரின் தீபாவளி, தசரா, ஹோலி, ரம்ஜான் ஆகிய புனித நாட்களில் மாநாடு ஏதும் நடப்பதில்லை. இந்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள இயலாது என்று கடிதத்தில், விருந்தில் கலந்து கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கு எச்.எல்.தத்து எழுதிய பதில் கடிதத்தில், “நீதிமன்றத்தின் நலன் முக்கியமா, தனிநபர் நலன் முக்கியமா” என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் 2007, 2009-ஆம் ஆண்டுகளிலும் பொது விடுமுறை தினங்களிலும், புனித வெள்ளியிலும் மாநாடுகள் நடந்துள்ளன என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் ஒரு விவாதப் பொருள் ஆகியிருந்தது.
Hot this week
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
Entertainment News
Previous article

