புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நீதிபதிகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் குரியன் புறக்கணித்தார். கிறிஸ்துவர்கள் புனித நாட்களாகக் கருதும், புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரை இந்த நீதிபதிகள் மாநாடு நடத்தப் பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே நீதிபதி குரியன் விருந்தில் பங்கேற்க மறுத்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குரியன் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி, தான் விருந்தில் பங்கேற்க இயலாமல் போவதற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். அதே போல், தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அந்த விருந்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்திருந்தார். அந்தக் கடிதத்தில், கிறிஸ்துவ மக்களின் விரத நாட்களான புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரையில் மாநாடு நடத்துவது வேதனை அளிக்கிறது. மற்ற மதத்தினரின் தீபாவளி, தசரா, ஹோலி, ரம்ஜான் ஆகிய புனித நாட்களில் மாநாடு ஏதும் நடப்பதில்லை. இந்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள இயலாது என்று கடிதத்தில், விருந்தில் கலந்து கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கு எச்.எல்.தத்து எழுதிய பதில் கடிதத்தில், “நீதிமன்றத்தின் நலன் முக்கியமா, தனிநபர் நலன் முக்கியமா” என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் 2007, 2009-ஆம் ஆண்டுகளிலும் பொது விடுமுறை தினங்களிலும், புனித வெள்ளியிலும் மாநாடுகள் நடந்துள்ளன என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் ஒரு விவாதப் பொருள் ஆகியிருந்தது.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
Entertainment News
Previous article

