December 8, 2025, 8:42 PM
25.6 C
Chennai

இ- பேப்பர் விவகாரத்தில் டெலிகிராம் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

telegram

சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெலிகிராம் நிறுவனத்துக்கு எதிராக, ஜக்ராண் பிரகாஷன் லிமிடெட் நிறுவனம், தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட டெலிகிராம் நிறுவனம் அதன் பயனர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பல்வேறு சேனல்களை உருவாக்க அனுமதித்துள்ளது.
மேலும், தைனிக் ஜாக்ராணின் இ-பேப்பர் தினமும் பி.டி.எப் வடிவத்தில் டெலிகிராம் தளத்தில் பல்வேறு சேனல்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால், எங்களது செய்தித்தாளின் இ-பேப்பர் வடிவம், சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு சேனல்கள் வழியாக டெலிகிராம் இ -பேப்பரை பதிவேற்றம் செய்து பரப்புவது எங்களுக்கு கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, அதன் வர்த்தக முத்திரை உரிமைகளையும், பதிப்புரிமையையும் மீறுவதாக உள்ளது.

சட்டவிரோத சேனல்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 18, 2020 நிலவரப்படி, டெலிகிராமில் 19,239 சேனல்கள் தைனிக் ஜாக்ராண் இ-பேப்பரை பகிர்ந்துள்ளன. எனவே, இ-பேப்பரை பதிவேற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​’நிறுவனம் துபாயில் இருப்பதால் அது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசாரணை முடிவில் நீதிபதிகள், அடுத்த 48 மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக இ- பேப்பர் வெளியிடும் சேனல்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறும் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

Topics

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories