April 19, 2025, 4:59 AM
29.2 C
Chennai

இ- பேப்பர் விவகாரத்தில் டெலிகிராம் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

telegram

சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெலிகிராம் நிறுவனத்துக்கு எதிராக, ஜக்ராண் பிரகாஷன் லிமிடெட் நிறுவனம், தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட டெலிகிராம் நிறுவனம் அதன் பயனர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பல்வேறு சேனல்களை உருவாக்க அனுமதித்துள்ளது.
மேலும், தைனிக் ஜாக்ராணின் இ-பேப்பர் தினமும் பி.டி.எப் வடிவத்தில் டெலிகிராம் தளத்தில் பல்வேறு சேனல்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால், எங்களது செய்தித்தாளின் இ-பேப்பர் வடிவம், சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு சேனல்கள் வழியாக டெலிகிராம் இ -பேப்பரை பதிவேற்றம் செய்து பரப்புவது எங்களுக்கு கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, அதன் வர்த்தக முத்திரை உரிமைகளையும், பதிப்புரிமையையும் மீறுவதாக உள்ளது.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி; கோப்பையை வென்ற இந்திய அணி!

சட்டவிரோத சேனல்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 18, 2020 நிலவரப்படி, டெலிகிராமில் 19,239 சேனல்கள் தைனிக் ஜாக்ராண் இ-பேப்பரை பகிர்ந்துள்ளன. எனவே, இ-பேப்பரை பதிவேற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​’நிறுவனம் துபாயில் இருப்பதால் அது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசாரணை முடிவில் நீதிபதிகள், அடுத்த 48 மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக இ- பேப்பர் வெளியிடும் சேனல்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறும் கூறியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories