ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம்

Published:

azim-premji ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கூட்டத்தில் பங்கேற்றது குறித்து, விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி விளக்கம் அளித்துள்ளார். தில்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பிலான ராஷ்ட்ரீய சேவா சங்க தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் ப்ரேம்ஜி. இந்த விழாவுக்கு அவர் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்ஜி பாகவத் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் அஸிம் பிரேம்ஜி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன இந்நிலையில், தாம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து விளக்கம் அளித்துள்ள அஸிம் பிரேம்ஜி, “எனது பங்கேற்பு பலரால் விரும்பத்தகாத ஒன்றாகப் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் நான் அவர்களது கொள்கைகளை பரப்புவதற்கு வந்திருப்பதைப் போல பேசுகிறார்கள். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நாட்டை நான் நேசிக்கிறேன். மனிதநேய உதவிகளை அளிக்கும் அந்த அமைப்பின் நிகழ்ச்சி என்ற காரணத்தால் மட்டுமே நான் இதில் பங்கேற்றேன். நான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் இல்லை” என்று கூறியுள்ளார். இதனிடையே அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ், ஆர்.எஸ்.எஸ்., ஒரு மதிப்புமிக்க, சமூகப் பணிகளில் ஈடுபடும் அமைப்பு. அதில் கலந்து கொள்வது ஒன்றும் மோசமான செயல் அல்ல என்று பதில் விமர்சனம் செய்துள்ளார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img