ஜனதா பரிவார்: முடிவு எடுக்கும் அதிகாரம் முலாயம் கையில்!

Published:

உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் ஜனதா பெயரை தங்கள் கட்சிகளில் வைத்துக் கொண்டுள்ள முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் என மூவரும் தங்கள் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ராஷ்ட்ரீய, ஐக்கிய, மதசார்பற்ற பெயர்கள் எல்லாம் மறைந்து, அவற்றில் உள்ள தளங்களும் மறைந்து, ஜனதா பரிவாராக உருவெடுக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.. நேற்று ஞாயிற்றுக்கிழமை இதற்காக, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லாலுவும், முலாயமும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். எனினும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், முலாயம் சிங் கையில் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img