April 23, 2025, 2:11 PM
35.5 C
Chennai

IPL 2025: அனைத்திலும் ஜொலித்த குஜராத் அணி!

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 21.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணி (198/3, ஷுப்மன் கில் 90, சாய் சுதர்ஷன் 52, ஜாச் பட்லர் ஆட்டமிழக்கமல் 41, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரூ ரசல் தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (159/8, அஜிங்க்யா ரஹானே 50, ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் 27, ரசல் 21, சுனி நரேன் 17, ரிங்கு சிங் 17, பிரசித் கிருஷ்ணா 2/25, ரஷித் கான் 2/25, சிராஜ், இஷாந்த் ஷர்மா, வாஷிங்க்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 90 ரன், 10 ஃபோர், 3 சிக்சர் ஒரு மிக அருமையான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன், 8 ஃபோர்) இன்னிங்க்ஸ் இறுதி வரை விளையாடினார். ராகுல் திவாத்தியா (பூஜ்யம் ரன்) இன்று சோபிக்கவில்லை. ஷாருக் கான் ( 5 பந்துகளில் 11 ரன்) கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்தது.

ALSO READ:  IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          199 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே (36 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (13 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்றாவர்களால் அதிரடியாக ஆட்டமுடியவில்லை.

அவர்களின் நன்கு விளையாடக்கூடிய மட்டையாளர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (1 ரன்) (டி காக் இன்று விலையாடவில்லை), சுனில் நரேன் (13 பந்துகளில் 17 ரன்), வெங்கடேஷ் ஐயர் (14 பந்துகளில் 17 ரன்), ரசல் (15 பந்துகளில் 21 ரன்), ரமந்தீப் சிங் (1 ரன்), மொயின் அலி (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று அவர்களது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து 39 ரன் களில் தோல்வியைத் தழுவியது.

          குஜராத் அணியின் அணித்தலைவர், இன்று 90 ரன் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Topics

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

ப்ளீஸ்… கூட்டத்துல இதையெல்லாம் பேசுங்களேன்! – தென்காசி எம்.பி.க்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள்!

இது ஒரு முக்கியமான கோரிக்கை! எளிதாக நிறைவேற்றக் கூடியது தான். காலையில் பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை

பஞ்சாங்கம் ஏப்ரல் 22- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக் கோரி மனு!

தமிழக அமைச்சர் பொன்முடியைக் கைது செய்ய வலியூறுத்தி, தமிழக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Entertainment News

Popular Categories