IPL 2025: அனைத்திலும் ஜொலித்த குஜராத் அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 21.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணி (198/3, ஷுப்மன் கில் 90, சாய் சுதர்ஷன் 52, ஜாச் பட்லர் ஆட்டமிழக்கமல் 41, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரூ ரசல் தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (159/8, அஜிங்க்யா ரஹானே 50, ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் 27, ரசல் 21, சுனி நரேன் 17, ரிங்கு சிங் 17, பிரசித் கிருஷ்ணா 2/25, ரஷித் கான் 2/25, சிராஜ், இஷாந்த் ஷர்மா, வாஷிங்க்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 90 ரன், 10 ஃபோர், 3 சிக்சர் ஒரு மிக அருமையான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன், 8 ஃபோர்) இன்னிங்க்ஸ் இறுதி வரை விளையாடினார். ராகுல் திவாத்தியா (பூஜ்யம் ரன்) இன்று சோபிக்கவில்லை. ஷாருக் கான் ( 5 பந்துகளில் 11 ரன்) கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்தது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

          199 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே (36 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (13 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்றாவர்களால் அதிரடியாக ஆட்டமுடியவில்லை.

அவர்களின் நன்கு விளையாடக்கூடிய மட்டையாளர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (1 ரன்) (டி காக் இன்று விலையாடவில்லை), சுனில் நரேன் (13 பந்துகளில் 17 ரன்), வெங்கடேஷ் ஐயர் (14 பந்துகளில் 17 ரன்), ரசல் (15 பந்துகளில் 21 ரன்), ரமந்தீப் சிங் (1 ரன்), மொயின் அலி (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று அவர்களது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து 39 ரன் களில் தோல்வியைத் தழுவியது.

          குஜராத் அணியின் அணித்தலைவர், இன்று 90 ரன் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories