ஏய்க்கும் ஒரு சிலரால் தேசத்தின் வளர்ச்சி பாதிப்பு: மோடி பேச்சு

Published:

pm modi - 2026

புது தில்லி:

ஜிஎஸ்டி வரிவிதிப்பு சனிக்கிழமை இன்று நாடு முழுவதும் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விளக்குவதற்காக கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், தில்லியில் ஐ.சி.ஏ.ஐ.கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்…

இந்தியப் பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி புதிய பாதைக்கு வித்திட்டுள்ளது. சென்ற வருட இறுதியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  ஒரு சிலர் மட்டுமே கொள்ளையடித்து வருவது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக உள்ளது.  37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆடிட்டர்களின் கையெழுத்து பிரதமரின் கையொப்பத்தை விட வலிமையானது. ஆடிட்டர் எனப்படும் பட்டயக்கணக்காளரின் கையெழுத்தை நம்பியே கணக்கு வழக்குகளை அரசு ஏற்றுக்கொள்கிறது. அரசின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பட்டயக்கணக்காளர்கள் நடந்துகொள்ளக்கூடாது. டாக்டர்கள் வியபாரத்திற்காக மக்களை தவறாக பயன்படுத்தவில்லை. அதுபோன்று பட்டயக் கணக்காளர்கள் சமுதாய பொருளாதாரத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும்.

நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஊக்குவிப்பதற்குத்.தேவையான அனைத்தையும் நம்மிடம் இருந்தே பெறும் வகையில் தன்னிறைவு அடைய வேண்டும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

வரும் 2022-ஆண்டில், நாம் நம் நாட்டின் 75-ம் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாடு தன்னிறைவு பெற வேண்டும். அப்போது, வீடில்லாத மக்கள் என்று எவரும் இருக்கக் கூடாது. அனைவருக்கும் குடியிருக்க சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதே இலக்கு.  இவ்வாறு மோட பேசினார்.

Related articles

Recent articles

spot_img