ஒரு மாதத்தில் திருமணம்! தற்கொலை செய்த பெண்… கண்ணீரில் பெற்றோர்!

Published:

suicidaldeath
suicidaldeath
  • இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்.
  • மணப்பெண் தற்கொலை.
  • கண்ணீர் வடிக்கும் பெற்றோர்.

தன் திருமணத்திற்கு செலவுக்காக கடன் வாங்க பெற்றோர் சிரமப்படுகிறார்கள் என்ற மனவேதனையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாள். இந்த சம்பவம் காமாரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தெலங்காணா காமாரெட்டி மாவட்டம் லிங்கம்பேட்ட மண்டலத்தில் உள்ள ஐலாபூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐலாபூர் கிராமத்தைச் சேர்ந்த பைடாகுல பாலையா, கங்காமணி தம்பதிகளின் மகள் மகேஸ்வரி (18) அண்மையில் இன்டர் பாஸானாள். மேற்படிப்பு படிக்க வைக்கும் வசதி இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்விக்க பெற்றோர் தீர்மானித்தனர். ஒரு இளைஞனோடு திருமணம் நிச்சயமானது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி திருமணத்திற்கு முகூர்த்தம் வைத்துள்ளார்கள். ஆனால் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் கடன் வாங்க எண்ணினார்கள். ஆனால் எங்குமே கடன் கிடைக்காததால் இந்த மாதம் 27ஆம் தேதி பாவையாவுக்கும் கங்காமணிக்கும் சண்டை தகராறு ஏற்பட்டது.

தன் திருமணத்திற்காக தன் பெற்றோர் படும் கஷ்டத்தை பார்த்து மனவேதனை அடைந்த மகேஸ்வரி சனிக்கிழமை பூச்சி மருந்தை குடித்து விட்டாள். அதை கவனித்த குடும்பத்தினர் அவளை காமாரெட்டி அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

நிலைமை சீரியசாக மாறியதால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெறும்போது ஞாயிறு அன்று மாலை அவள் உயிரிழந்தாள்.

இளம்பெண்ணின் தாய் கங்காமணியின் புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img