சோகத்தில் நாய் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

dog

உத்தரப்பிரேச மாநிலம், கான்பூரில் தன்னை வளர்த்த எஜமானி இறந்ததால் துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த நாய் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அரசு மருத்துவமனையின் சுகாதார இயக்குநராக இருந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். இவர் கான்பூரில் உள்ள மாலிக்புரத்தில் வசித்து வந்தவர். இவர் நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நோயால் அவதியுற்ற நாயை தனது வீட்டிற்கு எடுத்து வந்து அதற்கு ஜெயா என பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்துள்ளார்.

இதனிடையே மருத்துவர் அனிதா சிறுநீரக நோயால் அவதியுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது பிரிவால் மிகவும் வருத்தத்தில் இருந்த ஜெயா அனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம் பார்த்து துக்கம் தாங்காமல் வீட்டின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் இல்லாமல் ஜெயா இறந்து போனது . அனிதாவை பறிகொடுத்த குடும்பத்தினர் ஆசையாய் வளர்த்த நாயும் தற்கொலை செய்து கொண்டதை எண்ணி சோகத்தில் மூழ்கினர். நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories