ராணுவத்தினரின் வீரம், தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது: மோடியின் கார்கில் வெற்றி தின வாழ்த்து

kargil 3 - 2026

புதுதில்லி:

ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் பல்வேறு நட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே பஸ் சர்வீஸ், வாகா எல்லையில் கைகுலுக்கல், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ண ரயில் எனப் பேர் தாங்கிய சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் சர்வீஸ் பாகிஸ்தான் பிரதமருடன் தனிப்பட்ட நட்பு பாராட்டல் என்றெல்லாம் முயற்சி எடுத்து வந்த வேளையில், பாகிஸ்தானோ இந்தியாவின் முதுகில் குத்தும் வேலையில் இறங்கியது. அந்நாட்டின் அதிபராக இருந்த முஷாரப், இந்தியாவுக்கு வந்து, அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு நட்புறவு கொண்டாடியதை எல்லாம் மறந்தார். காஷ்மீரில் உள்ள இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரக்க வழிகோலினார்.

அப்போதுதான் இந்தியா முழித்துக் கொண்டது. கார்கிலை மீட்க இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே கார்கில் பகுதியில் போர் நடைபெற்றது. 90 நாட்கள் நடந்த இந்தப் போரில், இந்தியா பல இழப்புகளைச் சந்தித்தும், வீரர்கள் பலரின் இன்னுயிரைத் தியாகம் செய்தும், இந்தியா வெற்றி பெற்றது.

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப் படுகிறது. அவ்வகையில்  இன்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர்  மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவுகூர வேண்டும். மக்களின் பாதுகாப்பு, மற்றும் நாட்டுக்காக துணிச்சலுடன் போரிட்டவர்களை நினைவுகூருங்கள்” என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று பல இடங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தில்லி இந்தியா கேட் பகுதயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ராணுவ அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அருண் ஜேட்லி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories