ராணுவத்தினரின் வீரம், தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது: மோடியின் கார்கில் வெற்றி தின வாழ்த்து

kargil 3 - 2026

புதுதில்லி:

ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் பல்வேறு நட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே பஸ் சர்வீஸ், வாகா எல்லையில் கைகுலுக்கல், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ண ரயில் எனப் பேர் தாங்கிய சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் சர்வீஸ் பாகிஸ்தான் பிரதமருடன் தனிப்பட்ட நட்பு பாராட்டல் என்றெல்லாம் முயற்சி எடுத்து வந்த வேளையில், பாகிஸ்தானோ இந்தியாவின் முதுகில் குத்தும் வேலையில் இறங்கியது. அந்நாட்டின் அதிபராக இருந்த முஷாரப், இந்தியாவுக்கு வந்து, அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு நட்புறவு கொண்டாடியதை எல்லாம் மறந்தார். காஷ்மீரில் உள்ள இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரக்க வழிகோலினார்.

அப்போதுதான் இந்தியா முழித்துக் கொண்டது. கார்கிலை மீட்க இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே கார்கில் பகுதியில் போர் நடைபெற்றது. 90 நாட்கள் நடந்த இந்தப் போரில், இந்தியா பல இழப்புகளைச் சந்தித்தும், வீரர்கள் பலரின் இன்னுயிரைத் தியாகம் செய்தும், இந்தியா வெற்றி பெற்றது.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப் படுகிறது. அவ்வகையில்  இன்று கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பிரதமர்  மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவுகூர வேண்டும். மக்களின் பாதுகாப்பு, மற்றும் நாட்டுக்காக துணிச்சலுடன் போரிட்டவர்களை நினைவுகூருங்கள்” என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று பல இடங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தில்லி இந்தியா கேட் பகுதயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ராணுவ அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அருண் ஜேட்லி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories