ரோஹிங்யா அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசு

புது தில்லி:

ரோஹிங்யா அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்னே மாகாணத்தில் சிறுபான்மை சமூகத்தினராக ரோஹிங்யா இன முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான அளவில் வசித்து வரும் இவர்களில் சிலர், கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதம் தாங்கிய போராட்டங்களினால், மியான்மரில் பயங்கரவாதம் தலையெடுக்கச் செய்தனர். இதனால், உள்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்களின் மீதும் அதிருப்தி அடைந்தனர்.

இதை அடுத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சிலர்தான் என்றாலும், ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்கள் மீதும் ராணுவம் வன்முறைத் தக்குதலை கட்டவிழ்த்து விட்டது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு தப்பிச்சென்ற வண்ணம் உள்ளனர். இந்தியாவிலும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருக்கின்றனர். ஆனால், ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தங்களை நாடு கடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, மொகம்மது சலிமுல்லா, மொகம்மது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. திங்கள்கிழமை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரோஹிங்யா அகதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்யா அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தொடர்ந்து தங்கி வருகின்றனர். இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவு. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories