ரோஹிங்யா அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசு

புது தில்லி:

ரோஹிங்யா அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்னே மாகாணத்தில் சிறுபான்மை சமூகத்தினராக ரோஹிங்யா இன முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான அளவில் வசித்து வரும் இவர்களில் சிலர், கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதம் தாங்கிய போராட்டங்களினால், மியான்மரில் பயங்கரவாதம் தலையெடுக்கச் செய்தனர். இதனால், உள்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்களின் மீதும் அதிருப்தி அடைந்தனர்.

இதை அடுத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சிலர்தான் என்றாலும், ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்கள் மீதும் ராணுவம் வன்முறைத் தக்குதலை கட்டவிழ்த்து விட்டது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு தப்பிச்சென்ற வண்ணம் உள்ளனர். இந்தியாவிலும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருக்கின்றனர். ஆனால், ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தங்களை நாடு கடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, மொகம்மது சலிமுல்லா, மொகம்மது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. திங்கள்கிழமை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரோஹிங்யா அகதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்யா அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தொடர்ந்து தங்கி வருகின்றனர். இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவு. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories