ரோஹிங்யா அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசு

புது தில்லி:

ரோஹிங்யா அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்னே மாகாணத்தில் சிறுபான்மை சமூகத்தினராக ரோஹிங்யா இன முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான அளவில் வசித்து வரும் இவர்களில் சிலர், கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதம் தாங்கிய போராட்டங்களினால், மியான்மரில் பயங்கரவாதம் தலையெடுக்கச் செய்தனர். இதனால், உள்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்களின் மீதும் அதிருப்தி அடைந்தனர்.

இதை அடுத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சிலர்தான் என்றாலும், ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்கள் மீதும் ராணுவம் வன்முறைத் தக்குதலை கட்டவிழ்த்து விட்டது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு தப்பிச்சென்ற வண்ணம் உள்ளனர். இந்தியாவிலும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருக்கின்றனர். ஆனால், ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தங்களை நாடு கடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, மொகம்மது சலிமுல்லா, மொகம்மது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. திங்கள்கிழமை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரோஹிங்யா அகதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்யா அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தொடர்ந்து தங்கி வருகின்றனர். இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவு. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories