ஆந்திரத்தில் கோயில் கட்ட… தெலங்கானா முதல்வர் நன்கொடை!

Published:

andhra temple kcr help - 2026

ஶ்ரீபொட்டி ஸ்ரீராமலு நெல்லூர் மாவட்டத்தில் நாயுடுபேட்டை மண்டலம் ஸ்வர்ணமுகி திவ்ய க்ஷேத்திரத்தில் வெங்கடேஸ்வர சுவாமி ஆலய நிர்மாணத்திற்கு தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகரராவ், அவர் மனைவி ஷோபா தம்பதிகள் நிதி உதவியுள்ளார்கள்.

andhra temple kcr help1 - 2026

ஆலயத்தின் முன்புறத்தில் மகா ராஜ கோபுரம் மற்றும் கிழக்கு மாட வீதி கட்டுவதற்கு நன்கொடை அளித்துள்ளனர்.

சனிக்கிழமை அன்று ஆலயத்தில் பெருமாளின் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், இதர பூஜை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறின. இந்த நிகழ்ச்சியில் கேசிஆர் தம்பதிகள் பங்கு பெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட் நிபந்தனைகளின் காரணமாக அவர்கள் அதில் பங்கு பெறவில்லை. ஆலய நிர்வாகிகள் கேசிஆர் பெயர் பொறித்த கல்வெட்டை வெளியிட்டார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img