15 வயது சிறுமி.. டீயில் மயக்க மருந்து.. பம்புசெட்.. 28 மணி நேரம்.. இஸ்மாயில், இர்ஷாத் சாஹிர் மூன்று இளைஞர்கள் செய்த கொடூரம்!

Published:

pump-set

ஒரு பம்ப்செட்டுக்குள் அடைத்து வைத்து 15 வயது பெண்ணை இரண்டு நாள் பலாத்காரம் செய்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

ஹரியானாவின் குருகிராமில் நுஹ் மாவட்டத்தின் பினாங்வா கிராமத்தில் ஒரு 15 வயது சிறுமி அங்குள்ள வயல் வெளியில் தங்களின் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அந்த ஊரை சேர்ந்த இஸ்மாயில், இர்ஷாத் மற்றும் சாஹிர் ஆகிய மூன்று இளைஞர்களும் அந்த பெண்ணுக்கு குடிக்க டீ கொடுத்தனர்.

அதை வாங்கி குடித்த சிறிது நேரத்திலேயே அந்த சிறுமிக்கு மயக்கம் வந்துள்ளது. அதனால் அந்த சிறுமி அந்த வயல் வெளியில் உள்ள பம்ப் செட்டிலேயே மயங்கி விழுந்தார்.

vankodumar - 2026

அப்போது அந்த மூன்று இளைஞர்களும் அந்த சிறுமியை வீட்டுக்கே அனுப்பாமல் 28 மணி நேரத்திற்கு மேல் அடைத்து வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தனர்

நடுநடுவே அந்த பெண் கண் விழித்து பார்த்த போது மீண்டும் அவரை மயங்க செய்து அந்த பெண்ணை மறுபடியும் மூன்று பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இப்படியாக கிட்டத்தட்ட ஒரு இரவு இரண்டு பகல் அந்த பெண்ணை அந்த பம்ப் செட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளதால் அந்த சிறுமி மிகவும் சோர்வாகி, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என கூறி தன்னை விடுமாறு கேட்டதற்கு அவர்கள் இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டி அனுப்பியுள்ளார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் பயப்படாத அந்த பெண் அங்குள்ள காவல் நிலையதில் அந்த இளைஞர்கள் மீது புகாரளித்ததும், போலீசார் அந்த மூன்று பேரை கைது செய்தபோது அவர்கள் அந்த பெண்ணே தங்களை தேடி வந்ததாக வழக்கினை திசை திருப்ப முயன்றனர் .மேற்கொண்டு போலீசார் விசாரிக்கிறார்கள்.

Related articles

Recent articles

spot_img