‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை! ரூ.50 ஆயிரம் அபராதம்!

yogi
yogi

உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்!

திருமணத்துக்காக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஹிந்துப் பெண்களைக் காதலித்து கட்டாயப்படுத்தி மாதமாற்றி திருமணம் செய்யும் லவ் ஜிகாத் சம்பவங்கள் நாடு முழுதும் திட்டமிட்ட ரீதியில் அதிகரித்து வருகின்றன. இதனால் சமூகப் பதற்றங்களும் ஏற்படுகின்றன. இந்த நிலையில், லவ் ஜிஹாத் சம்பவங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக., ஆளும் உத்தர பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தெரிவித்து வந்தன. இவற்றில் உ.பி., மாநில அரசு முந்திக் கொண்டுள்ளது.

உ.பி., மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்தபோது… திருமணம் செய்வதற்காக மதம் மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

இது போன்ற சூழல்களைத் தடுக்கும் வகையில் திருமணத்துக்காக மதமாற்றம் செய்வது குற்றம் என்ற வகையில் அவசரச் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்டத்தின்படி மதமாற்றம் செய்தால் 1 முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இளம் சிறுமியர், எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் பழங்குடியினப் பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரு குழுவாக மதமாற்றம் செய்தால், அதில் ஈடுபடும் அமைப்புக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

எனினும், திருமணத்துக்குப் பின் மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து அதற்கு அனுமதி பெற வேண்டும்… என்று கூறினார் சித்தார்த் நாத் சிங்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories