புது தில்லி:
தஞ்சை மற்றும் கும்பகோணம் இரு நகரங்களும் விவசாயம் மற்றும் கலாச்சாரம் இரண்டிலும் முக்கியத்வம் வாய்ந்தவை. இந்த இரு நகரங்களும் மன்னை விரைவு வண்டிகளில் பயணம் செய்யும் வாய்ப்பை இழந்துள்ளன. மாற்று ஏற்பாடாக ஒரு இணைப்பு ரயில் திருச்சியிலிருந்து மாயவரம் வரை அறிமுகம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வெள்ளிக்கிழமை அன்று மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் கோரிக்கை வைத்தார்.