பெண் விரும்பினால் வயதுக்கு வந்தவுடனே திருமணம் செய்யலாம்: கோர்ட் தீர்ப்பு!

child-marriage
child-marriage

இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி பூப்பெய்திய ஒரு இஸ்லாமிய பெண்ணைத் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தம்பதி தங்கள் மனுவில், “எனக்கு 36 வயது. நான் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு 17 வயது. நாங்கள் இருவரும் இஸ்லாமிய சடங்கு முறைப்படி கடந்த ஜனவரி 21ஆம் தேதி திருமணம் செய்துகொண்டோம்.

இதனை விரும்பாத மனைவியின் உறவினர்கள் வயதைக் காரணம் காட்டி எங்களைப் பிரிக்க நினைக்கின்றனர். ஆகவே எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்கா ஷெரின், “இஸ்லாமிய தனிநபர் சட்டப்பிரிவு 195இன் கீழ், பெண் ஒருவர் வயதுக்கு வந்துவிட்டால், அவர் விரும்பும் நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது. அதேசமயம் வயதுக்கு வந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடைபெறும் திருமணம் சட்டப்படி செல்லாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இத்திருமணம் பெண்ணின் ஒப்புதலுடன் நடந்திருப்பதால் குடும்பத்தாரோ உறவினரோ தலையிட எந்த உரிமையும் இல்லை. அப்பெண்ணின் உறவினர்களின் வற்புறுத்தல்களாலும் மிரட்டல்களாலும் அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது.

ஆகவே தம்பதிக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறி தீர்ப்பு வழங்கினார். குறிப்பாக, 15 வயதில் ஒரு பெண் பூப்பெய்தியதாகக் கருதப்படுவார் என்றும் தீர்ப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories