December 6, 2025, 12:35 PM
29 C
Chennai

அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு!

court-1
court-1

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதாவது, தனியார் மருத்துவமனைகளில் அவசரத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அதற்கான மெடிகிளெய்மை பண்ணிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பொதுவாக, Central Government Health Scheme (CGHS) எனப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் மெடிகிளெய்ம் செய்து கொள்ள முடியும்.

இது தொடர்பான ஒரு வழக்கில்தான், அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான மருத்துவச் செலவுத் தொகையை (Reimbursement) விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்

CGHS பட்டியலில் மருத்துவமனை இல்லை என்பதை சுட்டிக்காட்டி Reimbursement தர முடியாது என மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

“Reimbursement கேட்பவர் உண்மையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாரா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மருத்துவமனையோ டாக்டரோ அந்த சிகிச்சையை அளித்ததற்கான சான்றுகள் இருந்தாலே போதும்” என்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே. அகர்வால் குறிப்பிட்டார்.

நீதிபதி அகர்வாலுடன் நீதிபதி அசோக் பூஷனும் இணைந்த உச்ச நீதிமன்ற அமர்வுதான் இவ்வழக்கை விசாரித்து, மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் இந்த அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மருத்துவ வசதிகளின் அனைத்து பயன்களையும் பெற அவர்களுக்கு முழு உரிமை உள்ளதாகவும், அந்த உரிமையை அவர்கள் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சிகிச்சை பெறும் வயதான ஓய்வூதியதாரர்கள் Reimbursement தொடர்பான பிரச்சனைகளால் உடலளவிலும் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் துன்பப்படக் கூடாது என்ற விஷயத்தையும் உச்ச நீதிமன்றம் குறித்து வைத்துக் கொண்டது.

மேலும், ஓய்வூதியம் பெறுவோரின் Reimbursement தொகையை ஒரு மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்ட அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுக்குப் பிறகும் தங்கு தடையற்ற மருத்துவ வசதிகளை அரசு ஊழியர்கள் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே CGHS திட்டம் முன்னெடுக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

CGHS திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories