அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு!

court-1
court-1

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதாவது, தனியார் மருத்துவமனைகளில் அவசரத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அதற்கான மெடிகிளெய்மை பண்ணிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பொதுவாக, Central Government Health Scheme (CGHS) எனப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் மெடிகிளெய்ம் செய்து கொள்ள முடியும்.

இது தொடர்பான ஒரு வழக்கில்தான், அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான மருத்துவச் செலவுத் தொகையை (Reimbursement) விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்

CGHS பட்டியலில் மருத்துவமனை இல்லை என்பதை சுட்டிக்காட்டி Reimbursement தர முடியாது என மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

“Reimbursement கேட்பவர் உண்மையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாரா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மருத்துவமனையோ டாக்டரோ அந்த சிகிச்சையை அளித்ததற்கான சான்றுகள் இருந்தாலே போதும்” என்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே. அகர்வால் குறிப்பிட்டார்.

நீதிபதி அகர்வாலுடன் நீதிபதி அசோக் பூஷனும் இணைந்த உச்ச நீதிமன்ற அமர்வுதான் இவ்வழக்கை விசாரித்து, மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் இந்த அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மருத்துவ வசதிகளின் அனைத்து பயன்களையும் பெற அவர்களுக்கு முழு உரிமை உள்ளதாகவும், அந்த உரிமையை அவர்கள் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சிகிச்சை பெறும் வயதான ஓய்வூதியதாரர்கள் Reimbursement தொடர்பான பிரச்சனைகளால் உடலளவிலும் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் துன்பப்படக் கூடாது என்ற விஷயத்தையும் உச்ச நீதிமன்றம் குறித்து வைத்துக் கொண்டது.

மேலும், ஓய்வூதியம் பெறுவோரின் Reimbursement தொகையை ஒரு மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்ட அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுக்குப் பிறகும் தங்கு தடையற்ற மருத்துவ வசதிகளை அரசு ஊழியர்கள் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே CGHS திட்டம் முன்னெடுக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

CGHS திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories