February 22, 2026, 10:59 AM
26.1 C
Chennai

சவுதியில் இறந்து போன இந்துவை முஸ்லிமாக்கி அடக்கம்! கணவனின் சடலத்திற்காக போராடும் இந்திய மனைவி!

Cemetery - 2026

சவூதி அரேபியாவில் இறந்த தன் கணவரின் உடலை மீட்க அவரின் மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மாரடைப்பால் இறந்துள்ளார். இது குறித்த செய்தி இந்தியாவில் இருக்கும் அவரது மனைவி அஞ்சு சர்மாவிற்கு தெரிவிக்கப்பட்டது. கணவரது உடலை அனுப்ப கூறி அஞ்சு சர்மா கோரிக்கை வைத்தார்.

ஆனால் மனுதாரருக்கு அவரது கணவரின் உடல் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் சஞ்சீவ் குமாரின் உடலை முஸ்லீம் முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தியதில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஜெட்டா செய்த தவறு காரணமாக, இறப்புச் சான்றிதழில் சஞ்சீவ் குமாரின் மதத்தை ‘முஸ்லீம்’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சீவ் குமாரின் உடலை தகனம் செய்ய மனைவியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஒப்புதலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தூதரக அதிகாரிகள் செய்த தவறிற்கு மன்னிப்பு கடிதம் அளிக்கப்பட்டது. எனவே ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தனது கணவரின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இறந்த நபரின் சரியான இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு தகுந்த நடவடிக்கைகளைச் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories