அகதிகளாக இந்தியாவில் வாழ்கிறோம்: பாகிஸ்தான் அஹமதியான் முஸ்லிம்கள் பிரதமருக்கு கோரிக்கை கடிதம்!

muslim - 2026

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவுகள் அல்லாமல் அஹமதியான் என்ற ஒரு பிரிவும் உள்ளது. இப்பிரிவினரை தம் மதத்தவர் என உலக முஸ்லிம்கள் ஏற்பதில்லை. இதற்கு முஸ்லிம்களின் மதக்கோட்பாடுகளில் அஹமதியான்களுக்கு வேறு வகையான கொள்கை உள்ளிட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக உள்ளன.

இதன் அடிப்படையிலேயே பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் காதியானில் 1835-ல் பிறந்த மிர்சா குலாம் அகமது என்பவர் அஹமதியான் பிரிவை உருவாக்கினார். இவர்கள் தனி மசூதிகளில் தொழுகை நடத்துகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால், முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் அஹமதி பிரிவினரை 1974-ல் சட்டம் இயற்றி ‘முஸ்லிம் அல்லாதவர்கள்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் மற்ற பிரிவு முஸ்லிம்களை இஸ்லாத்தின் முறைப்படி ‘அஸ்ஸலாம் அலைக்கும்’ எனக்கூறி வணங்குவதும் தண்டனைக்குரியக் குற்றமாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானில் அஹமதியான்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவும் கருதப்படுவதால் அவர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வசிக்கின்றனர்.

ஜெர்மனியில் அகதிகளாகத் தங்கியுள்ள அஹமதியான் முஸ்லிம்கள் 528 பேரை தற்போது நாட்டை விட்டு வெளியேறும்படி அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தங்கி நாடு திரும்பியவர்களில் சிலர் வெளிநாடுகளின் உளவாளிகள் எனக் கருதி பாகிஸ்தானியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இதனால், அஹமதியான்கள் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இந்தியாவில் அகதிகளாக வாழ விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து ‘பஞ்சாபின் காதியானில் வாழும் அஹமதியான் முஸ்லிம்கள் கூறும்போது, ‘நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானிலும் அஹமதியான் பிரிவினரை வளர்க்கும் பொருட்டு எங்களில் ஒரு சில குடும்பத்தினர் இங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

பாகிஸ்தானில் அவர்கள் பலவகை கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்திய பிரஜையாக முடியாது.

எனவே அகதிகளாகவாவது இங்கு வாழ மத்திய அரசிடம் ஜெர்மனியிலுள்ள அஹமதியான் அகதிகள் கோரியுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories