December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

அகதிகளாக இந்தியாவில் வாழ்கிறோம்: பாகிஸ்தான் அஹமதியான் முஸ்லிம்கள் பிரதமருக்கு கோரிக்கை கடிதம்!

muslim - 2025

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவுகள் அல்லாமல் அஹமதியான் என்ற ஒரு பிரிவும் உள்ளது. இப்பிரிவினரை தம் மதத்தவர் என உலக முஸ்லிம்கள் ஏற்பதில்லை. இதற்கு முஸ்லிம்களின் மதக்கோட்பாடுகளில் அஹமதியான்களுக்கு வேறு வகையான கொள்கை உள்ளிட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக உள்ளன.

இதன் அடிப்படையிலேயே பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் காதியானில் 1835-ல் பிறந்த மிர்சா குலாம் அகமது என்பவர் அஹமதியான் பிரிவை உருவாக்கினார். இவர்கள் தனி மசூதிகளில் தொழுகை நடத்துகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால், முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் அஹமதி பிரிவினரை 1974-ல் சட்டம் இயற்றி ‘முஸ்லிம் அல்லாதவர்கள்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் மற்ற பிரிவு முஸ்லிம்களை இஸ்லாத்தின் முறைப்படி ‘அஸ்ஸலாம் அலைக்கும்’ எனக்கூறி வணங்குவதும் தண்டனைக்குரியக் குற்றமாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானில் அஹமதியான்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவும் கருதப்படுவதால் அவர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வசிக்கின்றனர்.

ஜெர்மனியில் அகதிகளாகத் தங்கியுள்ள அஹமதியான் முஸ்லிம்கள் 528 பேரை தற்போது நாட்டை விட்டு வெளியேறும்படி அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தங்கி நாடு திரும்பியவர்களில் சிலர் வெளிநாடுகளின் உளவாளிகள் எனக் கருதி பாகிஸ்தானியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இதனால், அஹமதியான்கள் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இந்தியாவில் அகதிகளாக வாழ விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து ‘பஞ்சாபின் காதியானில் வாழும் அஹமதியான் முஸ்லிம்கள் கூறும்போது, ‘நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானிலும் அஹமதியான் பிரிவினரை வளர்க்கும் பொருட்டு எங்களில் ஒரு சில குடும்பத்தினர் இங்கிருந்து அனுப்பப்பட்டனர்.

பாகிஸ்தானில் அவர்கள் பலவகை கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்திய பிரஜையாக முடியாது.

எனவே அகதிகளாகவாவது இங்கு வாழ மத்திய அரசிடம் ஜெர்மனியிலுள்ள அஹமதியான் அகதிகள் கோரியுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories