December 6, 2025, 6:17 AM
23.8 C
Chennai

தந்தை இறந்த அடுத்த நாளே தேர்தல் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ்!

Muktha arya - 2025

மேற்குவங்கத்தில் தந்தை இறந்த அடுத்த நாளில் தேர்தல் பணிக்கு வந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

ஹவுரா மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான முக்தா ஆர்யா என்ற பெண் அதிகாரியின் தந்தை கடந்த 5ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார்.

அதனால், தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தந்தையின் இறுதிச் சடங்கிற்கு சென்றார் முக்தா.

இந்நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி தனது மாவட்டத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றதை அடுத்து தந்தை இறந்த அடுத்தா நாளே அந்த ஐஏஎஸ் அதிகாரி பணிக்கு வந்தார். நாள் முழுவதும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து அனைத்து பணிகளையும் கண்காணித்தார் .

தந்தை இறந்த அடுத்த நாளே பணிக்கு வந்த அவரை அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேற்குவங்கத்தில் நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது மூன்று பெண் ஐஏஎஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

முக்தா ஆர்யாவுடன் சேர்த்து தெற்கு 24 பர்கானா ஆட்சியர் அந்தரா ஆச்சார்யா, ஹூக்லி மாவட்ட ஆட்சியர் தீபா ப்ரியா ஆகியோர் தேர்தலை நடத்தி முடித்தனர்.

கடமை தவறாத அந்த பெண் அதிகாரிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேற்குவங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories