இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில், வசதி படைத்தவர்கள் தாமாக முன் வந்து மானியத்தை விட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் இன்று சர்வதேச எரிசக்தி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது … நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்திய போது, வசதி படைத்தவர்கள் மானியம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். அதை ஏற்று நாடெங்கும் 2.80 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியம் பெறுவதை தவிர்த்தனர். இதனால் மத்திய அரசுக்கு 100 கோடி ரூபாய் மிச்சம். இந்தப் பணம் ஏழைகள் நலனுக்காக செலவிடப்படும். எனவே வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியம் பெறுவதில் இருந்து விலக்கு பெற வேண்டும்… என்றார். மேலும்… நமது நாடு முழுமையான வளர்ச்சி பெற வேண்டுமானால், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கக்கூடாது. தற்போது நாம் எரிசக்தியை 77 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதை நாம் 10 சதவீதம் குறைத்தாக வேண்டும். இந்தியாவின் 75–வது சுதந்திர தினம் 2022–ம் ஆண்டு கொண்டாடப்படும் போது 10 சதவீதம் எரிசக்தி இறக்குமதியை குறைக்க வேண்டும். இது நமது கனவாக இருக்க வேண்டும்.இதில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் 2030–ம் ஆண்டுக்குள் நம்மால் 50 சதவீத எரிசக்தி இறக்குமதியை குறைக்க முடியும் என்று உறுதிபட தெரிவிக்கிறேன். எரிசக்தி உற்பத்தியை உள்நாட்டில் நாம் அதிகரிக்கும் போது, ஏழைகளுக்கு மேலும் உதவ முடியும். தற்போது நாடெங்கும் 27 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் 1 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்துக்காக நாடெங்கும் 12 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களது வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மானியத்தொகை வழங்கப்படுகிறது. மானியத்தொகை சிந்தாமல், சிதறாமல் சென்றடைவதால் ஊழல் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊழலை எதிர்த்து போராடி ஒழிக்க வேண்டுமானால் அமைப்பு நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் கொள்கை முறை வேண்டும். எரிவாயுக்கான நேரடி மானியம் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. – என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

