February 22, 2026, 9:04 PM
27.3 C
Chennai

கொரோனா: சடலத்திலிருந்து தொற்று பரவுமா? மருத்துவர் விளக்கம்!

corono-dead-body-2
corono-dead-body-2

இறந்தவர்கள் மூலம் கொரோனாத் தொற்று பரவும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல், உறவினர்களிடம் வழங்கப்படுவது இல்லை. தொற்று பரவல் வாய்ப்பு காரணமாக இறந்தவரின் உடல் நேரடியாக இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்கு அனுப்பப்படுகிறது. இறந்தவரின் முகத்தைக் கடைசியாக பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இறந்தவருக்கு தங்கள் மதப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியவில்லையே என்று குடும்பத்தினர் வேதனையில் ஆழ்கின்றனர். இந்த சூழலில் இறந்தவர்கள் மூலம் கொரோனாத் தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர்.

இது குறித்து எய்ம்ஸ் உடற்கூறு ஆய்வுத் துறைத் தலைவர் டாக்டர் சுதீர் குப்தா கூறுகையில், “கொரோனா வைரஸ் இறந்த நோயாளியின் மூக்கு மற்றும் தொண்டைக் குழிக்குள் 12 முதல் 24 மணி நேரம் வரையில் உயிரோடு இருக்கலாம். அந்த நேரத்தில் தொற்று பரவலுக்கு வாய்ப்புள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த 100 பேரின் உடலை நாங்கள் ஆய்வு செய்தோம். 12 மற்றும் 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. 24 மணி நேரத்துக்குப் பிறகு மூக்கு மற்றும் தொண்டைக்குழிப் பகுதியில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது இல்லை கண்டறிந்துள்ளோம். அதே நேரத்தில் 12 முதல் 24 மணி நேரம் வரையில் பரவலுக்கு வாய்ப்புள்ளது” என்றார்.

மூக்கு மற்றும் வாய்ப் பகுதி மிகவும் பாதுகாப்பான முறையில் மூடப்படுவதாலும், உடலில் இருந்து வேறு வழிகளில் திரவம் கசிவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலமும் கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்திவிடலாம்.

அதன் பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடலைக் கொடுப்பதில் எந்த பாதிப்பும் இருக்காது. இருப்பினும் உடலைப் பெறுபவர்கள் கை கிளவுஸ், மாஸ்க், பிபிடி உடை, கண்ணாடி அணிந்துதான் இறுதிச் சடங்கை செய்ய வேண்டும். உடலை எரித்த பிறகு இறந்தவரின் அஸ்தி, எலும்பைப் பெறுவதில் எந்த பிரச்னையும் இல்லை. அதன் வழியாக கொரோனா பரவாது” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories