December 6, 2025, 2:58 PM
29 C
Chennai

வெறித்தனமாய் மதம் மாற்றும் கிறிஸ்டீன் மெடிக்கல் அசோசியேஷன்: LRO குற்றச்சாட்டு!

Cristian medical association
Cristian medical association

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) ‘மருத்துவ அறிவியலை’ தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக மதமாற்றத்தை பரப்ப 83.95 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
சமூக சேவை என்ற பெயரில் இவை நடந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஜெயலால் இதன் ட்ரஸ்டீ ஆவார். CMAI வெளிப்படையாகவே சர்ச் மூடநம்பிக்கைகளை பரப்பிய போதும் இவட் அமைதியாகவே இருந்தார். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கம், இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் ஜானரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மற்றும் பலரை முன்னணி படுத்துகிறது. இவர்கள் அனைவரும் தங்களுடைய மதமாற்ற நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் பற்றி மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பாக நடந்த தேசிய மாநாட்டில் அருள் அங்கெட்டல் கூறுகையில், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம். நாம் பலவித சாதனைகள் செய்து வெற்றிகளை கொண்டு வருவோம். நாம் அனைவரும் இணைந்து ஒருமனதாக சுகாதார அமைப்பின் கடவுளாக இயேசு கிறிஸ்துவை ஆக்குவோம் என்று தெரிவித்திருந்தார்.

படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு மேலும் மருத்துவ அறிவியலை பயன்படுத்தி மதமாற்றங்கள் செய்வதற்கு பயிற்சிகளையும் நடத்துகிறது. அவர்கள் மத சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதாவது கிறிஸ்தவ மதமாற்றம்.

தற்பொழுது புதிதாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து வகுப்புகளையும் இந்த அமைப்பு நடத்துகிறது.

இந்த அமைப்பின் நோக்கம் மத மாற்றம், அதற்கு பாதுகாப்பு அளிப்பது, இளம் தன்னார்வலர்களும் உதவியாளர்களையும் ஒன்றிணைத்து ஆன்மீக பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆன்லைன் டிரெயினிங் நடத்தப்படுகிறது.

பல வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்களுக்கு பினாமி போல செயல்பட்டு, மருத்துவ விஷயங்கள் மூலமாக மத மாற்றங்களை நடத்திவருகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 (1) மற்றும் FCRA சட்டங்கள் 2010-ன் கீழும் குற்றமாகும்.

சமூக சேவை நடவடிக்கையாக நன்கொடை பெறுவதாக கூறி சர்ச்சுகளுடனும், எவாஞ்சலிஸ்ட்களுடனும் கூட்டணி வைத்து மருத்துவ அறிவியலை பயன்படுத்தி வருவதாக LRO அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அவர்கள் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு 116 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்து, விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நீதிமன்றத்திற்கு செல்லவும் தயார் என எல்லாரும் அறிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ மூடநம்பிக்கைகளையும் நவீன அலோபதி மருத்துவத்தை கலந்து தவறான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அமைப்பின் வெளிநாட்டு நன்கொடை பதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories