இதற்கும் காரணம் பிடிஆர் தியாகராஜன்!கடும் கோபத்தில் அமித்ஷா!

amitshah
amitshah

ஜெய்ஹிந்த் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது…

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக உளவு அமைப்புகள் ஒரு தகவலை அனுப்பியுள்ளன. இந்தக் குறிப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது திமுக பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் அண்மையில் தொடங்கியது.

ஆளுநர் உரையின் இறுதியில் வழக்கமாக ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை, நாடு வெல்லட்டும் என்ற பொருளில் இடம்பெறும்.

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள நாஞ்சில் மண்ணைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை உருவாக்கிய சொல்… அதை தமிழகத்தின் சட்டமன்ற கூட்டத்தில் இடம்பெறும் ஆளுநர் உரையில் இருந்து நீக்கி இருப்பது தேச விரோத செயல் என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கருத்துக்கள் கூறப்பட்டு வந்தன.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள மத்திய உளவு அமைப்புகள் மூன்று பக்கங்கள் அடங்கிய ரகசிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளன.

ஆளுநர் உரையில் முதலில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. ஆனால் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் அதை நீக்கி முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அமித் ஷாவுக்கு அதிர்ச்சி அளித்தது என்பதைவிட கோபத்தையே அதிகம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலில் ஒன்றிய என்ற சொல்லை பயன்படுத்தி பிரிவினை வாதத்தை மீண்டும் தொடங்கி வைத்தவர் தியாகராஜன் தான் … அதுபோல் ஜெய்ஹிந்த் என்ற சொல்லையும் நீக்கி இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

சபையில் பாஜகவுக்கு 4 உறுப்பினர்கள் இருந்தபதும் இதை உடனடியாக கண்டித்து வெளிநடப்பு அல்லது எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தது சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இனி சட்டசபை கூடும் போதெல்லாம் சபையில் ஜெய்ஹிந்த் என கோஷம் எழுப்பும் படி கட்சி எம்எல்ஏக்கள் அறிவுறுத்தப் படக்கூடும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமித்ஷா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories