பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதை படம் பிடித்து ப்ளாக் மெயில் செய்து பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸ் கைது செய்தது
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பதம்பூர் கெரியா பகுதியில் அங்கித் ஜாதவ் என்ற 20 வயதான இளைஞர் வசித்து வந்தார் .
அந்த இளைஞரின் பக்கத்து வீட்டில் இரண்டு டீனேஜ் சகோதரிகள் வசித்துவந்தனர். அந்த ஜாதவ் அந்த டீனேஜ் பெண்களை பார்த்து அடிக்கடி சைட் அடிப்பார்.
இந்நிலையில் அந்த இரு பெண்களில் ஒருவர் ஒரு நாள் தன்னுடைய வீட்டில் குளித்து கொண்டிருந்த பொழுது அந்த ஜாதவ் தன்னுடைய வீட்டு மாடியிலிருந்த்து அந்த பெண் குளிப்பதை தன்னுடைய செல்போனில் படம் பிடித்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம் சென்று தான் அந்த பெண் குளிப்பதை படமெடுத்து விட்டதாகக் கூறி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் விடப்போவதாக மிரட்டியுள்ளார்.
அதனால் அந்த பெண் பயந்துள்ளார். பின்னர் அவர் அந்த வீடியோவினை ஊடகத்தில் வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் தன்னோடு பாலியலிறவு கொள்ள வரவேண்டுமென்று கூறி மிரட்டியுள்ளார்.
அதனால் பயந்து போன அந்த பெண் அதற்கு சம்மதித்துள்ளார். அதன் பிறகு அந்த தங்கையின் வீடியோவை காமித்து அவரின் அக்காவையும் அவர் இதே போல் மிரட்டி பாலியலை பலாத்காரம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரின் ப்ளாக் மெயில் தாங்க முடியாமல் அவர்கள் அங்கு காவல் நிலையத்ததில் தங்களின் பெற்றோரோடு சென்று புகார் கூறியுள்ளனர். பிறகு போலீசார் வழக்கு பதிந்து அந்த ஜாதவை கைது செய்தனர்.