பிச்சைக்காரர்கள் இடையில் நகையைப் பகிர்ந்து கொள்வதில் சண்டை: பிறகு…?!

Published:

gold recovery from beggers
gold recovery from beggers

பிச்சைக்காரர்கள் இடையில் நகையைப் பகிர்ந்து கொள்வதில் சண்டை வந்ததால் எதிர்பாராத திருப்பம்….

ஹைதராபாத்தில் பிச்சைக்காரர்கள் இடையே பங்கு பிரித்துக் கொள்வதில் வேறுபாடு வந்ததால் தங்கத் தாலி பத்திரமாக போலீசாரிடம் வந்து சேர்ந்தது. இந்த சம்பவம் பாக்யநகரம் சார்மினார் அருகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹைதராபாத் உப்புகுடா தானாஜி நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சுவாதி ஜூலை 25ஆம் தேதி தன் ஆக்டிவா வாகனத்தில் ஹைதராபாதில் உள்ள சில அம்மன் கோயில்களோடு கூட சார்மினார் பாக்யலக்ஷ்மி ஆலயத்தையும் தரிசித்து வணங்கினார். திரும்ப வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கழுத்தில் இருந்த 4 துலாம் தாலிச் சங்கிலி காணாமல் போய்விட்டதை அறிந்து கவலையடைந்து ஊடனே உள்ளூர் சத்ரிநாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் அவர் சென்ற கோவில்கள் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை பரிசீலித்த போது அந்தப் பெண்மணியின் செயின் அவர் கழுத்தில் இருப்பதைக் கண்டனர். இறுதியாக அவர் சென்ற சார்மினார் பாக்கியலட்சுமி கோவில் அருகில் தான் காணாமல் போயிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

சார்மினார் பாக்கியலட்சுமி ஆலயம் அருகில் 4 பேர் எப்போதும் பிச்சை எடுத்து வருவது வழக்கம். அதில் ஒருவர் 4 துலாம் தங்கதாலி கிடைத்ததை மீதி உள்ள பிச்சைக்காரர்களிடம் கூறினார். ஆனால் கப் சிப் என்று எது கிடைத்தாலும் நாம் நான்கு பேரும் அதனை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிச்சைக்காரர்கள் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆனால் அவர்கள் பங்கு பிரித்து கொள்வதில் வேறுபாடு ஏற்பட்டதால் அந்த சங்கிலியை பிரித்துக் கொள்வதில் தாமதமாகியது. இறுதியில் அவர்களிடையே பெரிய சண்டை ஏற்பட்டதால் ஒரு பிச்சைக்காரன் எனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று போலீசாருக்கு செய்தி தெரிவித்து விட்டான். அதனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

உடனே பிச்சைக்காரர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து நான்கு துலாம் தாலிச் சங்கிலியை பெற்று அந்த நகையை காணாமல் போய்விட்டதாக புகார் சொன்ன சுவாதி தம்பதிகளிடம் அளித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img