லவ் ஜிகாத்: சிறுமியை கர்ப்பமாக்கி மதமாற வற்புறுத்தி மிரட்டல்!

Published:

vankodumai - 2026

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஜாமோ காவல் நிலையத்தில், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி 16 வயது தலித் சிறுமியின் தந்தை, நாஷாத் என்ற இளைஞர் மற்றும் அவரது தந்தை இஸ்லாம் மீது புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரின் அறிக்கை படி, நஷத் மீது கற்பழிப்பு, பிளாக்மெயில் மற்றும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டாலும், அவரது தந்தைக்கு அவரது மகனுக்கு உதவியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நஷாத் என்ற இளைஞர், தனது மைனர் மகளை திருமணம் செய்வதாக ஏமாற்றி 7 மாதங்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த பெண் கர்ப்பமாகிவிட்டதை அறிந்த நஷத், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.
அவர் கருக்கலைப்பு செய்யும்படி அவளை மிரட்டியுள்ளார்.

இதற்கிடையில், நஷாத்தின் தந்தை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை தனது மகனின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டும் என கூறியுள்ளார். இல்லையென்றால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என மிரட்டியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

தனது மகளை திருமணத்தின் பேரில் கடந்த 7 மாதங்களாக தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியதை பெண்ணின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால், அவர் மத மாற்றத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுத்தியுள்ளனர்.

தற்போது காவல் நிலையம் வரை சம்பவம் விசாரணைக்கு சென்றுள்ள நிலையில், நஷாத் மற்றும் அவரது தந்தை இஸ்லாமுக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 376 மற்றும் 506 ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மதமாற்ற எதிர்ப்பு சட்டம் மற்றும் போக்சோவின் பிற பிரிவுகள் மற்றும் பிற குற்றப்பிரிவுகளையும் போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img