December 6, 2025, 6:53 AM
23.8 C
Chennai

புனித நகரங்கள் மதுரா- பிருந்தாவனம் பகுதியில் மது, இறைச்சி விற்க உ.பி. அரசு தடை!

yogi at madura janmashtami festival
yogi at madura janmashtami festival

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா – பிருந்தாவனம் மாநகராட்சிப் பகுதியைச் சுற்றி 10 கி.மீ., தொலைவுக்கு மது, இறைச்சி முதலியன விற்பனை செய்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…

கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா – பிருந்தாவனத்தின் புனிதத்தைக் கருதி அப்பகுதியைச் சுற்றிலும் 10 கி.மீ. தொலைவுக்கு இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று, மதுரா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மது, இறைச்சி வியாபாரிகளுக்கு வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது… என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

முன்னதாக, கிருஷ்ண ஜயந்தி விழா அண்மையில் கொண்டாடப் பட்ட போது, மதுராவுக்குச் சென்று கிருஷ்ண ஜன்ம பூமியில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் வழிபாடு நடத்தினார். அப்போது அவர், மதுராவில் மது, இறைச்சி விற்க உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

உத்தரப் பிரதேசமாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள மதுரா – பிருந்தாவனம் பகுதி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்மபூமியாக போற்றப் படுகிறது. முன்னர் தனித் தனி மாநகராட்சிகளாக இருந்த மதுராவும் பிருந்தாவனமும் மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரா – பிருந்தாவன் என ஒரே மாநகராட்சியாக 2017ல் இணைக்கப்பட்டது. இந்த மாநகராட்சிப் பகுதியில் தான் தற்போது மது இறைச்சிக்கு தடை விதித்து, நகரின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories