ஆமதாபாத்: முற்றிலுமாக சூரிய சக்தியில் இயங்கி உலகைச் சுற்றி வருகின்ற விமானம் நேற்று குஜராத் மாநிலத்துக்கு வந்தது. நேற்று காலை மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 11 மணி நேர பயணத்துக்கு பிறகு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் நள்ளிரவு 11.25க்கு தரையிறங்கியது. இந்த விமானம் இன்று வாராணசி செல்கிறது. அப்போது கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக கங்கை நதி மீது பறக்க உள்ளது. பின்னர் வாராணசியில் இருந்து மியான்மர் நாட்டுக்குச் செல்கிறது.
குஜராத் வந்த சூரிய சக்தி விமானம்
Published:

