சென்னை: நடிகர் ரஜினி காந்த் நடித்து வெளியான லிங்கா படத்தின் பெயர் சமஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற்று மோசடி செய்ததாகவும் சிங்காரவேலன் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார். லிங்கா படத்தின் பெயர் சம்ஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி கேளிக்கை வரி விலக்கு பெற்றதில், தமிழக அரசுக்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லிங்கா பெயர் சர்ச்சை: ரஜினிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

