கழிவு நீரில் கீரையைக் கழுவி விற்பனை! வைரலான வீடியோ!

Published:

kirai
kirai

காய்கறிகளை விற்பனை செய்யும் இளைஞர், விற்பனைக்கு வந்த கீரையை கழிவுநீரில் போட்டு முக்கி எடுத்து விற்பனை செய்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் ஹனுமங்கஞ்ச் பகுதியில், இன்று அதிகாலை நேரத்தில் காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

சம்பவ இடத்தில் கீரைகளை விற்பனை செய்து வந்த இளைஞன், கீரைக்கட்டுகளை கழிவு நீரில் போட்டு எடுத்து சேகரித்து வைக்கிறான்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் அங்குள்ளவர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடியோவை பார்த்த அம்மாவட்ட ஆட்சியர், இளைஞரின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், வீடியோவின் பேரில் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

விசாரணையில், அவர் தர்மேந்திரா என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் தற்போது தலைமறைவாகி இருக்கிறார். அவருக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இதுபோன்ற நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், கொரோனா காலகட்டத்தில் பல பிரச்சனையை சந்திக்கிறோம்.

இப்படியான சூழலில் கழிவு நீரில் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை சுத்தம் செய்வது போல நடித்து ஊரை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. வீட்டில் காய்கறிகளை உபயோகம் செய்வதற்கு முன்னர், சுத்தமான நீரில் அதனை சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Related articles

Recent articles

spot_img