கன்னட சூப்பர் ஸ்டார் மரணம்! மாநிலத்தில் பதற்ற சூழல்!

Published:

kannada actor punith rajkumar passes away
kannada actor punith rajkumar passes away

கன்னட நடிகர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதும், கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது.

புனித் ராஜ்குமாருக்கு, உடற்பயிற்சியின் போது திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் புனித் 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார்.

முன்னதாக, புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பாதிக்கப் பட்ட நிலையில், பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அரசியல் கட்சியினர், உறவினர்கள், சக நடிகர்கள் & தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்ததால், மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு, கர்நாடக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img