பாகிஸ்தானின் (Pakistan) சாலைகளில் ராட்சத பறவை ஒன்று பைக்கிற்கும் காருக்கும் இடையில் ஓடத் தொடங்கியது. இதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
பின்னர் அனைவரும் இந்த காட்சியை தங்கள் போன்களில் படம் பிடிக்கத் துவங்கினர். இந்த பறவையால் காற்றில் பறக்க முடியாது, ஆனால் அதிக வேகத்தில் நன்றாக ஓட முடியும்.
இணையத்தில் பல்வேறு விசித்திரமான செய்திகள் நிரம்பியுள்ளன. பாகிஸ்தானின் பெரிய நகரங்களில் ஒன்றான லாகூர் தெருவில் நடந்த இந்த சம்பவமும் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
லாகூரில் ஒரு நெடுஞ்சாலையின் நடுவில் ஒரு நெருபுக்கோழி அதிவேகமாக ஓடுவதை மக்கள் கண்டனர். நெருப்புக்கோழியை அந்த சாலையில் பயணித்த பலர் படம் எடுத்தனர்.
அதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர். லாகூர் கால்வாய் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காணொளி (Viral Video) ஒரு லட்சம் முறை பார்க்கப்பட்டு, பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது. அலுவலகம் செல்பவர்கள் முதல் பஸ் பிடிப்பவர்கள் வரை பலரும் அந்த சாலையில் இந்த பறவை ஓடுவதை கண்டு வியந்தனர்.
இது குறித்து எழுதிய ஒரு பயனர், “சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இந்த நெருப்புக்கோழியை மனதில் வைத்து ஓட்டினர். இது ஒரு நல்ல விஷயம். மக்கள் வாகனம் ஓட்டும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.” என்று எழுதியுள்ளார்.
Me running to catch the bus to work every morning!!! pic.twitter.com/RrFpzTfOkS
— 🇵🇰EXTRA_Ordinary🇮🇪 (@Sur_ZAC) October 25, 2021