அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’.
இப்படம் திரைக்கு வந்து பல மாதங்கள் ஆனபோதிலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யாவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.
இப்படத்திலுள்ள ‘ஊ சொல்றியா மாமா, சாமி சாமி, ஸ்ரீவல்லி’ போன்ற பாடல்கள் ரசிகர்கள் இணையத்தில் ஹிட் அடித்தன. இந்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவ, இந்த பாடல்களுக்கு சிறுவர் தொடக்கி, பெரியவர்கள் வரை என அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இன்றளவும், இதன் மவுசு குறையாமல், ஊரே ‘புஷ்பா’ ஃபீவர் பிடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதே போல, புஷ்பா பட ஸ்ரீ வள்ளி பாடல் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் தாடியை கோதி வசனம் பேசும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் விஷயங்களும் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.
இதனை பலரும் சேலஞ்சாக எடுத்துக்கொண்டு நடனமாடி வருகின்றனர். மேலும், விராட் கோலி, பிராவோ உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் கூட, அல்லு அர்ஜுனை போல தாடி கோதும் ஸ்டைலை மைதானங்களில் செய்து காட்டி வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் பச்சிளங் குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.
அதன் வீடியோவில், பிறந்த சில மணி நேரம் கழித்த, பச்சிளம் குழந்தை ஒன்று ஒரு சிறிய புன்னகையுடன், தனது தாடையைத் தடவுகிறது.
அது பார்ப்பதற்கு, அப்படியே அல்லு அர்ஜுனின் தாடியைக் கோதுவது போலவே உள்ளது. மேலும், அந்த வீடியோவின் பின் பக்கத்தில், புஷ்பா படத்தின் வசனமும் இடம்பெறுகிறது.
இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிலர் ஊரையே ஆட்டி படைக்கும், புஷ்பா’ஃபீவர் பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்க வில்லையா என்று கிண்டலாக பதிவிட்டு உள்ளனர். இன்னும், சிலர் அல்லு அர்ஜுனின் புகழ் பரவட்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
ये तो पक्का कभी झुकेगा नहीं.🤩 pic.twitter.com/orOnRwPpPG
— Awanish Sharan (@AwanishSharan) March 7, 2022