
உலகை அச்சுருத்தி வரும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று கைது செய்து ஆரிப் வீட்டில் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப் என்பவர், கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த தனிசந்த்ராவில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது, வீட்டில் இன்று என்.ஐ.ஏ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது, ஆரிப் வீட்டில் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றியதுடன் அவரை, கைது செய்தனர்.அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆரிப்பை கண்காணித்து வந்ததாகவும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ‘அல்-கொய்தா’ அமைப்புடன், ‘டார்க்-வெப்’ மற்றும் ‘டெலக்ராம்’ வாயிலாக, ஆரிப் தகவல் பரிமாற்றம் செய்து வந்ததுடன், மார்ச் மாதம், சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை, ரகசிய இடத்தில் வைத்து, என்.ஐ.ஏ.. மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குழுவினர் விசாரிக்கின்றனர்.




