இன்றைக்கு இந்தியா உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தை -மோடி..

Tamil News large 3241102 - 2026

இன்றைக்கு இந்தியா உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தையாக தற்போது புதிய உச்சத்தை தொட்டு அதனையும் தாண்டிச் சென்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெங்களூரு விமான கண் காட்சி துவக்க விழாவில் பேசியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள எலஹங்கா விமானப்படைத் தளத்தில் மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி சர்வதேச விமான கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அந்த வகையில் இந்தாண்டுக்கான கண்காட்சி இன்று  முதல் பிப்.17 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது,

புதிய இந்தியாவின் திறமைக்கு, வளர்ச்சிக்கு பெங்களூருவில் நடைபெறும் இந்த கண்காட்சியே சாட்சி. இந்தியா தற்போது புதிய உச்சத்தை தொட்டு, அதனையும் தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கண்காட்சியில் சுமார் 100 நாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இதனை வெறும் நிகழ்ச்சியாகக் கருதிய காலமும் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, நாடு இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது.
இன்று இது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல இந்தியாவின் பலமும் கூட. இது இந்திய பாதுகாப்பு துறையின் நோக்கம் மற்றும் தன்னம்பிக்கையில் கவனம் செலுத்துகிறது. இன்றைக்கு இந்தியா உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தையாக மட்டுமல்லாமல், ஆற்றல் மிகுந்த பாதுகாப்பு கூட்டாளியாகவும் உள்ளது.

21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா இப்போது எந்த வாய்ப்பையும் இழக்காது, கடின உழைப்பில் பின்தங்கிவிடாது. எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சீர்திருத்த பாதையில், ஒவ்வொரு துறையிலும் புரட்சியை கொண்டு வருகிறோம்.
பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த நாடு இப்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. 2024-25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories