ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் ..

1148047 a - 2026

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து அவர் சென்னையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது வைத்து உள்ள பாசத்துக்கு தந்துள்ள பெருமைக்குரிய பரிசாக இதை பார்க்கிறேன். ஜார்கண்ட்- தமிழகம் இடையே பாலமாக இருக்க பதவி ஏற்றபின் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வேன்’ என்றார்.

mcms 3 - 2026

தொடர்ந்து ராஞ்சி சென்றடைந்த  சி.பி.ராதாகிருஷ்ணனை, அம்மாநில முதல்வர் ஹேமந்த்சோரன் வரவேற்றார். ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்,மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஞ்சி வந்து சேர்ந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.

FB IMG 1676722696314 - 2026

ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அபரேஷ் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவருக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பூங்கொத்து அளித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பதவியேற்ற மரியாதைக்குரிய சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மாநிலத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உங்களின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories