ஸ்ரீதேவி: நான்கில் இருந்து ஐம்பது நான்கு வரை!

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும் பரவியுள்ள இந்தியர்களின் மத்தியில் புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக துபைக்குச் சென்றிருந்தவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவி, தென் தமிழகத்தின் சிவகாசியில் 1963 ஆக.13 ஆம் தேதி பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே நடிக்கத் துவங்கி, சிறந்த குழந்தை நட்சத்திரமாகப் பேர் பெற்றவர். நான்கு வயதில் நடிக்கத் துவங்கினார். எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் துணைவன் என்ற பக்திக் காவியத்தில் முருகப் பெருமானாக சிறு குழந்தை வேடத்தில் நடித்தார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்தவர், பின்னர் ஜூலி என்ற ஹிந்திப் படத்தில் 1975ல் அறிமுகமானார்.

sridevi1 - 2026

13 வயதில் கதாநாயகியாக அறிமுகமான பெருமை ஸ்ரீதேவிக்கு உண்டு. 1976ல் சிறுமியாக இருந்தபோதே, மூன்று முடிச்சு என்ற படத்தில் தமிழில் கே.பாலசந்தரால் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தாலும், அவரது பெயர் சொல்லும் விதமாக அப்போதே அமைந்தது, பதினாறு வயதினிலே திரைப்படம். ஆனால் படம் வெளி வந்த போது, 14 வயதே ஆன ஸ்ரீதேவி, அந்தப் படத்தில் தூள் கிளப்பியிருந்தார்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அவர் நடித்த படங்கள் ஹிட் ஆயின. 1978ல் சிகப்பு ரோஜாக்கள், 1980ல் வறுமையின் நிறம் சிகப்பு, 1981ல் மீண்டும் கோகிலா, தொடர்ந்து மூன்றாம் பிறை, குரு, கல்யாணராமன், ஆகிய படங்கள் அவருக்கு பெரும் புகழைத் தந்தன. குறிப்பாக, வாழ்வே மாயம் படத்தில் அவர் பெயரிலேயே அமைந்த தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா – பாடல் ஒலிக்காத பட்டி தொட்டிகளே இல்லை எனலாம்.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

sridevi englishvinglish - 2026

ரஜினியுடன் நடித்த போக்கிரி ராஜா, ஜானி, ராணுவ வீரன், தர்மயுத்தம் ஆகிய படங்களில் நடித்து பெரும் பெயர் பெற்றார். அந்தக் கால கட்டத்தில், அவர் கடைசியாக தமிழில் நடித்த படமும் ரஜினியுடன் நடித்த நான் அடிமை இல்லை திரைப்படம்தான். அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் அது.

sridevi b - 2026

பின்னாளில் 83ம் வருடம் தொடங்கி 97ம் ஆண்டு வரை ஹிந்திப் படங்களில் கோலோச்சினார். தனது 50 வயதுகளைக் கடந்த அண்மைக் காலத்தில்கூட இங்கிலீஷ் விங்கிலீஷ், நடிகர் விஜய் உடனான புலி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்றார்.

இவரது நடிப்புத் திறமைக்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் நாட்டின் நான்காவது உயரியன் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

marriagephoto - 2026

இவர் மிதுன் சக்ரவர்த்தியை 85ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் 3 வருடங்களே வாழ்ந்தார். பின்னாளில் 96ல் போனி கபூருடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள்.

நான்கு வயதில் நடிக்கத் தொடங்கி, இந்திய சினிமாவின் லேடீ சூப்பர் ஸ்டார் என்ற பெருமை பெற்று, 54 வயது வரை திரையுலகில் கோலோச்சி, சுமார் 50 ஆண்டுகளை திரையுலகில் கடந்துள்ள ஸ்ரீதேவிக்கு திரையுலகத்தினர் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் தங்களது நினைவஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories