ஒருவழியாய் கடிதம் கொடுத்த துபை போலீஸ்; ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

மும்பை:

துபை போலீஸார் ஒரு வழியாக கடிதம் கொடுத்ததை அடுத்து, ஸ்ரீதேவி உடன் இன்று மாலை மும்பை கொண்டு வரப் படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

திருமண நிகழ்வுக்காக துபை சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, துபையில் உள்ள ஹோட்டல் குளியலறையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது. இதை அடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் உடல் உடற்கூறாய்வுக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், சில சட்டச் சிக்கல்களிருந்ததால், விசாரணை நடத்தப் பட்டது. இன்று காலை வரை விசாரணை நீண்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதரகமும் ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கச் செய்வதில் உறுதுணையாக இருந்தது.

sridevi 3 - 2026

விசாரணைகள் முடிவடைந்த நிலையில், ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு செல்வதற்கான முயற்சியாக, விடுவித்தல் கடிதத்தை உறவினர்களிடம் அளித்தனர் துபை போலீஸார்.

இதை அடுத்து பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை கொண்டு வரப்படுகிறது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலில் செலுத்துவதற்காக, மும்பையில் பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Related articles

Recent articles

spot_img