December 5, 2025, 3:48 PM
27.9 C
Chennai

திணறும் சபரிமலை! தடுமாறும் போலீஸ்! ஏமாற்றத்தில் திரும்பும் பக்தர்கள்!

sabarimala - 2025
#image_title

சபரிமலையில் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது கேரள போலீஸ்.

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் போலீஸ் இல்லாததால், சரிவர சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சன்னிதானம் வரை செல்ல முடியாமல் திரும்பும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

sabarimalai nadai open - 2025
#image_title

சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகம் உள்ளது. ஆன்லைன் முன்பதிவு வாயிலாக பக்தர்கள் வந்தாலும், தாங்கள் பதிவு செய்த நேரத்தில் இருந்து குறைந்தபட்சம், 24 மணி நேரம் கடந்த பின் தான் அவர்கள் பம்பை செல்ல முடிகிறது. அதன் பின் அங்கிருந்து மலையேறி 8 மணி நேரம் வரை வரிசையில் நிற்கின்றனர். இது பக்தர்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.

எந்த வசதிகளும் இல்லாமல் பக்தர்கள் பெருமளவு நேரத்தை போக்குவரத்து சிக்கலிலேயே சந்திக்க நேரிடுகிறது. நிலக்கல் அருகே இலவுங்கல் முதல் ளாகா வரை 12 கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுகின்றன. இதனால் பக்தர்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கேரள அரசு பஸ்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் நிலக்கல் – -பம்பை சேவை, பம்பை பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, சபரிமலைக்குச் செல்லும் பாதைகளில் முன்னதாகவே வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். தண்ணீரும், உணவும் கிடைக்காத இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுவதால், பக்தர்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு பல மணி நேர காத்திருப்புக்கு பின் இவர்கள் நிலக்கல்லில் இறங்கி கேரள அரசு பஸ்களில் ஏறினால், பல மணி நேரம் கழித்துதான் அந்த பஸ்களும் பம்பைக்கு இயக்கப்படுகின்றன.

பம்பையில் கூட்டம் குறைவதைப் பொறுத்து, அங்கிருந்து நிலக்கல்லுக்கு பஸ்கள் அனுப்பப்படுவதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் நிலக்கல்லிலும் பக்தர்கள் பல மணி நேர காத்திருப்புக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இதனாலும் கடும் சோர்வு அடைகின்றனர்.

இந்த கூட்ட நெரிசலால் விபத்துகளும் ஏற்படுகின்றன. துலாப்பள்ளியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த கேரள அரசு பஸ்சை டிரைவர் இயக்கிய போது, பஸ்ஸின் கீழே படுத்திருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாய் மகேஷ் ரெட்டி (32), சூர்யா பாபு(22) ஆகியோரின் கால்கள் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதை அடுத்து இருவரும் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலக்கல்லில் கேரள அரசு பஸ்சிலிருந்து ஒரு குழந்தை தவறி விழுந்ததை கண்டித்து, அங்கும் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். இவ்வாறு ஏற்கனவே உள்ள கூட்ட நெரிசல் போதாது என்று விபத்துகளால் ஏற்படும் சாலை மறியல்களால் மேலும் போக்குவரத்து பெரும் சிக்கலாகி இருக்கிறது.

இப்படி பல மணி நேரம் காத்திருந்து நிலக்கல்லில் இறங்கி பம்பை சென்று மலை ஏறிச் சென்றாலும் சரங்குத்தி, கியூ காம்ப்ளக்ஸ்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நாள் கணக்காக ஆகிவிடும் சூழலில் அதன் பின்னரே பக்தர்கள் ஐயப்பன் சன்னிதானத்துக்கு தரிசனத்திற்காக செல்ல முடிகிறது. இவ்வளவு சிரமப்பட்டு சாப்பாடு தண்ணீர் எதுவும் இல்லாமல் இயற்கை உபாதைகளை கூட சரியாக கழிப்பதற்கு வழி இன்றி, சன்னிதானம் சென்றாலும், முந்தைய காலங்களைப் போல் ஐயப்பனின் தரிசனம் கிடைப்பதில்லை என்று பக்தர்கள் மன வருத்தத்தில் கூறுகின்றனர்.

இதற்கிடையே, பக்தர்களுக்கு தேவையான வசதியை செய்து தரும்படி மாநில அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories