திருவிசநல்லூர் ஐயாவாள் உத்ஸவம், செங்கோட்டையில் கோலாகலம்!

ayyahval utsav in sengottai - 2026
#image_title

திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் உத்ஸவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கார்த்திகை அமாவாசையான டிச. 12 செவ்வாய்க் கிழமை நேற்று, திருவிசநல்லூரில் தன் வீட்டில் கங்கையை பொங்கச் செய்த மகான் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாளின் உத்ஸவம் கொண்டாடப்படுகிறது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாளுக்கு சிஷ்யையாய் அமைந்து பாடல்கள் பல புனைந்தவர் செங்கோட்டையிலிருந்த ஆவுடையக்காள்.

இந்தத் தொடர்பினால் செங்கோட்டையில் உள்ள அம்மன் சன்னதி தெருவில் உள்ள ராம பஜனை மடத்தில் ஐயாவாளின் பாதுகைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு வழி வழியாக பூசிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஐயாவாளின் உத்ஸவம் செங்கோட்டையிலேயும் விமரிசையாக நடைபெறுகிறது.

இதன்படி, செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெரு ஶ்ரீராம பஜனை மடத்தில் டிச.12 செவ்வாய் நேற்று, திருவிசநல்லூர் ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பாதுகை ருத்ராபிஷேக உத்ஸவம் காலை, மாலை, இரவு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு, செங்கோட்டையைச் சேர்ந்தவரும் தற்போது திருச்சி வாளாடியில் வசிப்பவருமான ராதாகிருஷ்ணன், முதல் முறையாக தீட்சை பெற்றுக் கொண்டு உஞ்சவிருத்தி பஜனையில் ஏற்று வர, ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பாதுகை ஊர்வலம் ஏழு தெருக்களிலும் நடைபெற்றது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பின்னர் ஸ்ரீராம பஜனை மடத்தில் ஐயாவாள் பாதுகைகளுக்கு ருத்ர ஜப அபிஷேகத்தை செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் ஶ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலை வித்யார்த்திகளும் வேத விற்பன்னர்களும் கலந்து கொண்டு நடத்தினார்கள். பின்னர் தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலையில் கிராம மகளிர் பஜனை மண்டலி குழுவினர், ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாளின் சிஷ்யையும், செங்கோட்டையில் பிறந்து வளர்ந்து அத்வைத ஞானத்தை உலகுக்குப் பரப்பிய ஆவுடையக்காளின் பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செய்தார்கள்.

இரவு நெல்லை ஶ்ரீ பாலகுருநாதர் பாகவதர் குழுவினர் நாமசங்கீர்த்தனம் செய்து நிகழ்ச்சியை சிறப்புற அமைத்தார்கள்.

செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற ஶ்ரீராம், மீனாட்சி சுந்தரம், ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட சிலர் கிராம ஜனங்களின் ஆதரவுடன் முன்னின்று சிறப்பாக இந்த உத்ஸவம் நடைபெற துணை புரிந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories